25 C
Jaffna
February 6, 2025
Pagetamil
குற்றம்

பொலிசாரிடமிருந்து தப்புவதற்காக ஹொரோயின் பக்கெட்டுக்களை விழுங்க முயன்ற இராணுவச்சிப்பாய்!

மொரட்டுவ, எகொட உயன பொலிஸ் வீதித்தடையில் பொலிஸாரிடம் பிடிபடுவோம் என்ற அச்சத்தில் நான்கு ஹெரோயின் பக்கெட்டுகளை விழுங்க முயன்ற ஒரு இராணுவ சார்ஜன்ட் இன்று காலை கைது செய்யப்பட்டார்.

தனிமைப்படுத்தல் சுகாதார விதிகளை மீறி முச்சக்கர வண்டியில் வந்தவர்,  பொலிஸ் சோதனைச்சாவடியை  தவிர்ப்பதற்காக, முச்சக்கர வண்டியிருந்து இறங்கி, சோதனைச் சாவடியை நடந்து செல்ல முற்பட்டுள்ளார்.

சந்தேகமடைந்த பொலிசார் அவரை பரிசோதிக்க முற்பட்ட போது, 4 பக்கெட் ஹெரோயினை உட்கொண்டுள்ளார். எனினும், அதை பொலிசார் முறியடித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தொடங்கொட பகுதியில் உள்ள முகாமில் பணியாற்றுபவர் என்று போலீசார் தெரிவித்தனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

குடும்பத் தகராறின் காரணமாக மனைவி கொடூர கொலை!

east tamil

அம்பலாந்தோட்டையில் மூவர் வெட்டிக் கொலை

east tamil

மாதம்பையில் கத்திக்குத்து தாக்குதல் – ஆண் உயிரிழப்பு, பெண் படுகாயம்

east tamil

கடித்துக் குதறிய கணவன்; மனைவிக்கு உதட்டில் 16 தையல்கள்

east tamil

உடுவில் பிரதேசத்தில் 330 லீற்றர் கோடாவுடன் ஒருவர் கைது!

Pagetamil

Leave a Comment