25.4 C
Jaffna
February 6, 2025
Pagetamil
இலங்கை

கிளிநொச்சியில் 60 வயதிற்கு மேற்பட்ட 7,000 பேர் தடுப்பூசி செலுத்தவில்லை!

கிளிநொச்சி மாவட்டத்தில் 60 வயதுக்கு மேற்பட்டோரில் 7000 பேர் தடுப்பூசி பெற்றுக்கொள்ளவில்லை என சுகாதார வைத்திய அதிகாரி சரவணபவன் தெரிவித்துள்ளார். 60 வயதுக்கு மேற்பட்டடோருக்கான நடமாடும் தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்த பின்னர் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கிளிநொச்சி மாவட்டத்தில் இன்றைய தினம் நடமாடும் தடுப்பூசி செலுத்தும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் 18 ஆயிரம் பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருக்கின்றனர்.

அவர்களில் ஏறத்தாழ 11 ஆயிரம் பேர் மாத்திரமே தடுப்பூசி பெற்றுள்ளனர். மிகுதியான 7 ஆயிரம் பேர்வரை தடுப்பூசி போடாமல் இருக்கின்றார்கள்.

தடுப்பூசி திட்டம் ஒரு மாத காலம் நீடித்தும் அவர்கள் தடுப்பூசியை பெற்றுக் கொள்ளவில்லை. அவர்களிற்கு வேறு வேறு காரணங்கள் இருக்கலாம்.

இந்த நிலையில் இன்றிலிருந்து ஒரு வார காலத்துக்கு அவர்களின் வீடுகளிற்கு சென்று இராணுவத்தினரின் உதவியுடன் தடுப்பூசிகளை செலுத்தவுள்ளோம்.

மாவட்டத்தில் விடுபட்டுள்ள 7000 பேருக்கும் தடுப்பூசியை செலுத்தும் வரை இத்திட்டம் முன்னெடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

காய்கறிகளின் விலை அதிகரிப்பு

east tamil

9 வருடங்களில் 3477 யானைகள் இறப்பு

east tamil

வீடெரிந்த எம்.பிக்களுக்கு ரணில் அள்ளிக்கொடுத்த தொகை!

Pagetamil

தமிழ்த்தேசிய அரசியலின் எதிர்காலம்

Pagetamil

வித்தியா கொலை வழக்கு – குற்றவாளிகளின் மேன்முறையீட்டை விசாரிக்க உள்ள உயர் நீதிமன்றம்

east tamil

Leave a Comment