பணிப்பெண்ணாக பணியாற்றிய போது உயிரிழந்த ஹிஷாலினி தொடர்பான வழக்கில் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனை 6 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு சிறை கண்காணிப்பாளருக்கு கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திர ஜயசூரிய இன்று (23) உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் ஐந்தாவது சந்தேக நபராக முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பெயரிடப்பட்டபோது நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.
ஏற்கனவே கைதான நான்கு சந்தேக நபர்களான ரிஷாத் பதியுதீனின் மனைவி, தந்தை, சகோதரன், தரகர் ஆகியோருக்கு பிணை வழங்க மறுத்த நீதிமன்றம் அவர்களை இம்மாதம் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1