நாடு முடக்கப்பட்ட காலப்பகுதியில்- இன்று முதல் ஓகஸ்ட் 30 வரை- புகையிரதங்கள் மற்றும் பேருந்துகள் இயங்காது என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்துகள் அத்தியாவசிய சேவை நடவடிக்கைகளின் நிமித்தம் விசேட கோரிக்கைகளை முன்வைக்கும் நிறுவனங்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என இராஜாங்க அமைச்சர் கூறினார்.
அத்தியாவசிய சேவைகள் இல்லாமல் பயணிகள் புகையிரதங்கள், இ.போ.ச பேருந்துகள் அல்லது தனியார் பேருந்துகள் இயங்காது என்று அவர் கூறினார்.



