கொரோனா வைரஸ் தொற்றுநோயால் வாழ்வாதாரத்தை இழந்த குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு ரூ .2,000 உதவித் தொகை வழங்க அரசு முடிவு செய்துள்ளது.
நிதியமைச்சின் செயலாளர் எஸ்ஆர் ஆட்டிக்கல இதனை தெரிவித்தார்.
23 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் உதவித்தொகை வழங்கப்படும்.
அதன்படி, பிற கொடுப்பனவுகளைப் பெறாத குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் உதவித்தொகையைப் பெற தகுதியுடையவர்களாக இருப்பார்கள்.
பயனாளிகளின் பட்டியலை அதற்கேற்ப தொகுக்குமாறு மாவட்ட செயலாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக தெரிவித்தார்.




