ஊரடங்கில் உலாவியவர்களை வளைத்துப்பிடித்து பரிசோதனை: இருவருக்கு தொற்று!

Date:

ஊரடங்கு அமுல்படுத்தப்பட்ட நிலையில் வவுனியா நகரில் உலாவித்திரிந்தவர்களிற்கு முன்னெடுக்கப்பட்ட அன்ரியன் பரிசோதனையில் இருவருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக வவுனியா நகரின் முக்கியபகுதிகளில் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் பொலிசாரின் ஏற்ப்பாட்டில் இன்று காலை அன்ரியன் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது A9 வீதி- நீதிமன்றத்திற்கு அருகாமையில் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் 2 பேருக்கு தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.

இதனையடுத்து குறித்த இருவரும் தனிமைப்படுத்தல் மையத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டனர்.

குறித்த நடவடிக்கைகளை மாவட்ட மேலதிக அரச அதிபர் தி.திரேஸ்குமார் பார்வையிட்டிருந்ததுடன் குறித்த செயற்பாட்டினை அனைத்து பகுதிகளிற்கும் விஸ்தரிப்பது தொடர்பாக ஆலோசனைகளையும் வழங்கியிருந்தார்.

spot_imgspot_img

More like this
Related

‘என்னை வெட்டியவர் வலியால் எப்படி துடிக்கிறார் என நேரில் பார்க்க வந்தேன்’: துன்னாலை வாள்வெட்டு சந்தேகநபர் பகீர் வாக்குமூலம்!

யாழ், வடமராட்சி, துன்னாலை பகுதியை சேர்ந்த இளம்குடும்பஸ்தர் ஒருவர் பருத்தித்துறையில் வெட்டிக்கொல்லப்பட்ட...

மெக்கா மீதான ஹூதிகளின் ட்ரோன் தாக்குதல் முயற்சிக்கு பரவலான எதிர்ப்பு

மெக்காவை குறிவைத்து ஹூதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய ட்ரோன் தாக்குதல் முயற்சியை சவூதி...

காட்டு யானைகளின் அச்சுறுத்தல் – வனஜீவிகள் அலுவலகம் அமைக்கவும் திட்டம்

சம்மாந்துறை அலவக்கரை மற்றும் அதனை அண்டிய கிராமப் பகுதிகளில் பகல் வேளைகளில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்