29.9 C
Jaffna
April 10, 2025
Pagetamil
மலையகம்

தாலி கட்ட தயாரான போது திடீரென நுழைந்த சுகாதார அதிகாரிகள்!

பொகவந்தலாவை – ஆரியபுர பகுதியில் சுகாதார விதிமுறைகளை மீறி இடம்பெறவிருந்த திருமண நிகழ்வொன்று பொகவந்தலாவை பொது சுகாதார வைத்திய அதிகாரிகளால் இன்று (20) காலை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

திருமண நிகழ்வு மற்றும் பொது நிகழ்வுகளுக்கு அரசாங்கம் தடைவிதித்துள்ள நிலையில், சுகாதார முறையினை மீறி இந்த திருமண நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டதாகவும், இதில் சுமார் 25கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதாகவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

பொகவந்தலாவை பொது சுகாதார வைத்திய அதிகாரிக்கு கிடைத்த தகவலுக்கமைய, குறித்த திருமண மண்டபத்துக்கு விரைந்த பொது சுகாதார அதிகாரிகள் மற்றும் பொகவந்தலாவை பொலிஸார் அங்கு கூடியிருந்தவர்களை எச்சரித்து வெளியேற்றியுள்ளனர்.

அத்துடன், மணமகன், மணமகள் மற்றும் அவர்களின் பெற்றோர்களுடன் மாத்திரம் திருமணத்தை நடத்துமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும் குறித்த திருமண மண்டபத்தின் உரிமையாளருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்படும்.

இதையும் படியுங்கள்

பேருந்துக்குள் வைத்து மாணவியை அறைந்த ஆசிரியை!

Pagetamil

பிரச்சாரத்தை ஆரம்பித்த அனுஷா அணி

Pagetamil

கோடீஸ்வர வர்த்தகரையும், மகளையும் கட்டிவைத்துவிட்டு முகமூடிக் கொள்ளையர் கைவரிசை!

Pagetamil

பொகவந்தலாவையில் கணவன், மனைவி சடலங்களாக மீட்பு

Pagetamil

27ஆம் திகதி ஊவா, சப்ரகமுவ மாகாண தமிழ் பாடசாலைகளுக்க விடுமுறை

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!