சாம்சங் நிறுவனத்தின் புதிய கேல்கஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டிருக்கிறது. சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ03எஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமானது. புது ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் ஹெச்.டி. பிளஸ் இன்பினிட்டி வி டிஸ்ப்ளே, ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ பி35 பிராசஸர், அதிகபட்சம் 4 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 11 மற்றும் ஒன் யு.ஐ. 3.1 கோர் வழங்கப்பட்டு இருக்கிறது.
புகைப்படங்களை எடுக்க 13 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி டெப்த் லென்ஸ், 2 எம்பி மேக்ரோ கேமரா, 5 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இதன் பக்கவாட்டில் கைரேகை சென்சார், 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1