30.6 C
Jaffna
April 12, 2025
Pagetamil
லைவ் ஸ்டைல்

சுண்ட வத்தல் சாதப்பொடி தயாரிக்கும் முறை

சுண்ட வத்தல் சாதப்பொடியை சாதம், நெய்யுடன் சேர்த்து சாப்பிடும் போது அருமையாக இருக்கும். இன்று இந்த பொடியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:
சுண்ட வத்தல் – 50 கிராம் மணத்தக்காளி வத்தல் – 25 கிராம்
உளுத்தம் பருப்பு – 50 கிராம்
மோர் மிளகாய் அல்லது சிவப்பு மிளகாய் – 5
மிளகு – 1/2 தேக்கரண்டி
சீரகம் – ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை – ஒரு பிடி
பெருங்காயம் – 1/4 தேக்கரண்டி
உப்பு – சிறிது ஏற்கனவே வத்தலில் உப்பு சுவை இருப்பதால் குறைத்து சேர்க்கவும்.

செய்முறை:

வாணலியை சூடு படுத்தி இரண்டு தேக்கரண்டி எண்ணெய் விட்டு வத்தல் வகையை ஒன்றொன்றாக போட்டு வாசனை வரும் வரை வறுத்தெடுத்துக்கொள்ளவும்.
பிறகு, அதே எண்ணெயில் மிளகாய் மிளகு, சீரகம் போட்டு வறுக்கவும்.
இறுதியாக கறிவேப்பிலை, உப்பு, பெருங்காயத்தை போட்டு வறுத்தெடுக்கவும். ஆறியதும் மிக்சியில் சேர்த்து மென்மையான பொடியாக அரைத்துக்கொள்ளவும்.
சூடான சாதத்தோடு நெய் சேர்த்து கலந்து சாப்பிடவும்.

இதையும் படியுங்கள்

சமையல் குறிப்புக்கள் – கோவா வடை

Pagetamil

திருகோணமலை ஸ்பெஷல் மாமைற் முறுக்கு

Pagetamil

மட்டக்களப்பு மரக்கறி கூட்டுக்கறி

Pagetamil

வரும் காதலர் தினத்தில் உங்கள் காதலை முன்மொழிய வெற்றிகரமான சூத்திரம் இதுதான்!

Pagetamil

கோழி இறைச்சியை சமைப்பதற்கு முன் கழுவக்கூடாதா?

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!