இலங்கையில் பதிவான அதிகபட்ச தொற்று: நேற்று 3,676 தொற்றாளர்கள்!

Date:

நேற்று 3,676 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து நாட்டில் உறுதிப்படுத்தப்பட்ட கோவிட் -19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 369,359 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த ஆண்டு தொற்றுநோய் பரவ ஆரம்பித்ததில் இருந்து நாளொன்றில் பதிவான அதிகபட்ச கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை இதுவாகும்.

நேற்றைய தொற்றாளர்களில் 3,660 பேர் புத்தாண்டு கோவிட் -19 கொத்தணியுடன் இணைக்கப்பட்டுள்ளனர்.

வெளிநாடுகளில் இருந்து சமீபத்தில் நாட்டிற்கு வந்த 16 பேருக்கும் நேற்று கோவிட் -19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

நாடு முழுவதும் 46,397 பேர் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்று, கோவிட் -19 இலிருந்து குணமடைந்த 2,188 நபர்கள் மருத்துவமனைகளில் இருந்து வெளியேறினர். இதன் மூலம் நாட்டில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 316,528 ஆக உயர்ந்துள்ளது.

தொற்று சந்தேகத்தில் 3,524 பேர் தற்போது மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.

இதற்கிடையில், நேற்று மேலும் 170 கொரோனா வைரஸ் தொடர்பான இறப்புகள் உறுதி செய்யப்பட்டது. இலங்கையில் பதிவான இறப்பு எண்ணிக்கை 6,604 ஆக உயர்ந்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

சுரேஷ் சாலே கழிப்பறைக்கு செல்வதென்றாலும் கோட்டாவிடம் கேட்பார்!

ஈஸ்டர் தாக்குதல்களின் சூத்திரதாரியாகக் கருதப்படும் சஹாரன் ஹாஷிம் உட்பட ஆயிரக்கணக்கானோருக்கு மேஜர்...

‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானார்

இயக்குநர் இமயம் பாரதிராஜா உடல்நலக் குறைவு காரணமாகச் சென்னையில் இன்று காலமானார்....

கனடாவில் சிறார் பாலியல் துஷ்பிரயோக வழக்கில் கைதான தமிழன்!

கனடா, டர்ஹாம் பிராந்தியத்தின் விட்பியில், குழந்தைகளை ஆசை காட்டி அழைத்தல் மற்றும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்