“குழந்தைகளின் ஐக்யூ அளவைக் குறைக்கும் கொரோனா”: ஆய்வில் தகவல்

Date:

கோவிட் -19 எனப்படும் கொரோனா தொற்று உலகம் முழுவதும் பரவி மக்களை அச்சுறுத்தி வருகிறது. கொரோனா தொற்றுக்கு பலரும் பலியாகி வருகின்றனர். அதிலும் பல கர்ப்பிணிப் பெண்களும் கொரோனா தொற்றுக்கு ஆளாகி, பின்னர் அதில் இருந்து மீண்டு வருகின்றனர். மேலும், கொரோனா தொற்றில் இருந்து பலரும் தங்களை காத்துக் கொள்ள தடுப்பூசியை நாடிச் செல்கின்றனர்.

கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்படும் கொரோனா தொற்று காரணமாக பிறக்கும் குழந்தைகளுக்கு ஐக்யூ எனப்படும் அறிவாற்றல் செயல்திறனில் குறைபாடு அதிகம் உள்ளதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், மூன்று மாதங்கள் முதல் மூன்று வயது வரையிலான குழந்தைகளின் சராசரி ஐக்யூ மதிப்பெண் 100 ஆக இருந்தது. ஆனால், தொற்றுநோயால் பிறந்த குழந்தைகளுக்கு ஐக்யூ மதிப்பெண் 78 ஆக குறைந்துள்ளது.

கொரோனா தொற்றால் வீட்டிலிருந்தே வேலை செய்யும் பொறுப்பு, அதிலும் வேலை செய்யும் பெண்களின் பொறுப்பு, வீட்டுப் பொறுப்பு போன்றவை பெற்றோரின் மன அழுத்தத்தை அதிகரித்துள்ளது. இது கர்ப்பிணிப் பெண்களுக்கும் பொருந்தும். அதிலும், வேலை இழந்த குடும்பங்களில் அதிக மன அழுத்தம், உணவுப் பற்றாக்குறை போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டு வருகின்றன. இதுகுறித்த ஆய்வில், மொத்தம் 672 குழந்தைகள் ஈடுபடுத்தப்பட்டனர்.

தேர்ந்தெடுக்கப்பட்ட மொத்த குழந்தைகளில், 308 குழந்தைகள் 2019-ம் ஆண்டு ஜனவரிக்கு முன் பிறந்த குழந்தைகள் ஆவர். 188 குழந்தைகள் ஜூலை 2020-ம் ஆண்டுக்குப் பிறகு பிறந்த குழந்தைகள் ஆகும். இதுமட்டுமின்றி, அவர்களில் 176 குழந்தைகள் 2019 ஜனவரி மற்றும் 2020 மார்ச் மாதத்துக்கு இடையில் பிறந்தவர்கள் ஆவர். இதில், கொரோனா காலகட்டத்தில் பிறந்த குழந்தைகளுக்கு, அதற்கு முன் பிறந்த குழந்தைகளைக் காட்டிலும், ஐக்யூ அளவு குறைவாகவே உள்ளது.

பொதுவாக ஒரு குழந்தையின் அறிவாற்றல் வளர்ச்சிக்கு, குழந்தையின் முதல் சில ஆண்டுகள் மிகவும் முக்கியமானவை. ஆனால், கோவிட் -19 நம் வாழ்க்கையில் வந்த பின், வீடு மட்டுமே கதியாக உள்ளது. அதிலும், பள்ளிகள், நர்சரிகள் மற்றும் குழந்தைகளின் விளையாட்டு மைதானங்கள் மூடியேக் கிடக்கின்றன. இதனால் குழந்தைகளின் வாழ்க்கையும் கணிசமான அளவு மாறிவிட்டது. இதனால் கூட குழந்தைகளின் ஐக்யூ அளவில் மாறுபாடு ஏற்படக் கூடும். இது தற்காலிகமானதா என்றால் அது தெரியவில்லை. ஏனெனில், தொற்றுத்நோய்க்குப் பிறகு, இயல்பு நிலை வரும்போது பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டால், அதன் முடிவில் மாற்றங்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

 

spot_imgspot_img

More like this
Related

சிரியா மீதான கடைசித்தடையையும் நீக்கியது அமெரிக்கா

திங்களன்று, அமெரிக்கா தனது பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளிக்கும் நாடுகள் (SST) பட்டியலில்...

மட்டு நகரில் பொலிஸ் ஜீப்வண்டியும் மோட்டார்சைக்கிளும் மோதிய விபத்தில் ஒருவர் படுகாயம் பொலிஸ் சாரதி கைது

மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு அருகில் பொலிஸ் ஜீப்வண்டியும் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்