29.5 C
Jaffna
March 28, 2024
உலகம்

மோசமான கையெழுத்தால் பிசுபிசுத்த வங்கிக் கொள்ளை!

பிரிட்டனில் ஓய்வூதியம் பெறும் ஒருவரின் வங்கிக் கொள்ளை முயற்சி, மோசமான கையெழுத்தால் தோல்வியில் முடிந்துள்ளது.

சசெக்ஸ் பகுதியைச் சேர்ந்த ஆலன் சிலேட்டரி என்பவர் 2 வாரங்களில், 3 வங்கிகளைக் கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளார்.

3 வங்கிகளிலும் கையால் எழுதப்பட்ட குறிப்பை வங்கி ஊழியர்களிடம் கொடுத்து, பணத்தைத் தன்னிடம் கொடுக்குமாறு அவர் கேட்டிருக்கிறார்.

மார்ச் 18ஆம் திகதி, 67 வயது சிலேட்டரி, முதல்முறை வங்கியில் கொள்ளையடிக்க முயன்றார்.

ஆனால், வங்கி ஊழியரால், கையால் எழுதப்பட்ட குறிப்பில் இருந்ததைச் சரியாகப் படிக்க முடியாததால், சிலேட்டரி வெறுங்கையுடன் திரும்பினார்.

மார்ச் 26ஆம் திகதி, வேறொரு வங்கியில் அது போன்ற குறிப்பைக் கொடுத்து அவர் 4,500 வெள்ளியைக் கொள்ளையடித்தார்.

ஏப்ரல் 1ஆம் திகதி, 3வது வங்கியிலும் அதே போல் முயற்சி செய்துள்ளார் சிலேட்டரி.

ஆனால், வங்கி ஊழியர் பணம் கொடுக்க மறுத்துவிட்டதால், வேறு வழியின்றி அவர் திரும்பிவிட்டார்.

கொள்ளை முடிந்து பொதுப் பேருந்தில் வீடு திரும்பிய அவரை, அவருடைய பேருந்துப் பருவச் சீட்டின் மூலம் காவல்துறையினர் அடையாளம் கண்டு கைது செய்தனர்.

அவருக்கு 6 ஆண்டுச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

நாயகியின் உயிரைக் காத்த காதல் சின்னம்!: 21 கோடி ரூபாய்க்கு ஏலம் போன ‘டைட்டானிக்’ மரக்கதவு

Pagetamil

ஜூலியன் அசாஞ்சேவுக்கு மரண தண்டனை விதிக்க கூடாது: அமெரிக்க அரசிடம் உத்தரவாதம் கோரும் பிரிட்டிஷ் நீதிமன்றம்

Pagetamil

அமெரிக்காவில் கப்பல் மோதி பாலம் இடிந்து விபத்து: நீரில் மூழ்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரம்

Pagetamil

காசாவில் உடனடி போர் நிறுத்தத்தை கோரி ஐ.நா பாதுகாப்புசபையில் தீர்மானம்!

Pagetamil

இருட்டு அறை… போதைப்பொருள்… சொர்க்க பிரச்சாரம்: ஐஸ் தலைவரின் அடிமைகளாக வைக்கப்பட்டிருந்த இளம் பெண்களின் தகவல்கள்!

Pagetamil

Leave a Comment