ராகமவில் உள்ள கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலையில் பணியாற்றிவந்த வைத்தியர் ஒருவர் இன்று கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார்.
மருத்துவமனையின் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை பிரிவில் பணியாற்றி வந்த 34 வயதான முகமது ஜனன் என்பவரே உயிரிழந்தார்.
கொரோனா தொற்றிற்குள்ளான வைத்தியர், அதே வைத்தியசாலையின் கொரோனா விடுதியில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவரது உடல்நிலை மோசமடைந்த பின்னர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவிற்கு மாற்றப்பட்டு கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்கு அங்கு சிகிச்சை பெற்றார்.
எனினும், அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்ததை அடுத்து அவர் இன்று காலை உயிரிழந்தார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
1
+1
1
+1
1