கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 170 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர். .
இலங்கையின் COVID-19 தொடர்பான உயிரிழப்பு எண்ணிக்கை 6,604 ஆக அதிகரித்துள்ளது என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
உயிரிழந்தவர்களில் 84 ஆண்களும் 86 பெண்களும் அடங்குவர். 60 ஆண்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், 24 பேர் 30 முதல் 59 வயதுக்குட்பட்டவர்கள்.
உயிரிழந்த பெண்களில் 70 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 16 பேர் 30 முதல் 59 வயதுக்குட்பட்டவர்கள்.





