ஜாமீன் கோரி மீரா மிதுன் மனு!

Date:

வாய்தவறி பட்டியலினத்தவரை பற்றி பேசிட்டேன்: ஜாமீன் கோரி மீரா மிதுன் மனு!

தமிழ் திரையுலகில் பட்டியலிடப்பட்ட மக்கள் பற்றி தரக்குறைவாக பேசியது தொடர்பாக நடிகை மீரா மிதுன் மீது புகார்கள் குவிந்தது. பின் போலீசார் மீரா மீது வழக்கு பதிவு செய்தார்கள்.

விசாரணைக்கு வருமாறு சம்மன் அனுப்பியும் வராமல் கேரளாவில் தலைமறைவாக இருந்த மீரா மிதுனை கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள். மீரா மிதுனை ஆகஸ்ட் 27 ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

அதன் பிறகு மீரா மிதுனை புழல் சிறையில் அடைந்தனர். அவர் மீது குண்டர் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க முடியும் என்ற எண்.

தற்போது ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் மீரா மிதுன்.

அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,

என்னை பற்றி அவதூறாக செய்தி பரப்பியதால் மன உளைச்சல் ஏற்படுகிறது. அந்த மன உளைச்சலில் கண்டனம் தெரிவிக்கும் வகையில் பேசினேன். அப்பொழுது வாய்தவறி பட்டியலிடப்பட்ட சமுதாயத்தை பற்றி பேசிவிட்டேன் என கூறினார்.

இதற்கிடையே மீரா மிதுனின் யூடியூப் சேனலை முடக்குமாறு யூடியூப் நிறுவனத்திற்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடிதம் எழுதியிருக்கிறார்கள்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

‘இம்ரான் கானுக்கு பார்வை இழப்பு’ – மருத்துவக் குழு பரிசோதிக்க பாக். உச்ச நீதிமன்றம் உத்தரவு

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்மான் கானுக்கு வலது கண்ணில் பார்வை இழப்பு...

CTC மீதான விமர்சனங்கள்- சிறு பதில்

“CTC புலிகளின் முன்னணி அமைப்பு” CTC என்பது கனடாவில் பதிவு செய்யப்பட்ட, கனடிய...

சமூக ஊடகங்களில் பரவும் அதிர்ச்சிக் காணொளி: 7 இளைஞர்கள் கைது!

சமூக ஊடகங்களில் ஒருவர் தாக்கப்படுவதைக் காட்டும் தாக்குதல் தொடர்பாக ஏழு சந்தேக...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்