மாகாணங்களிற்கிடையிலான போக்குவரத்து தடை: செப்ரெம்பரின் பின் தடுப்பூசி அட்டையின்றி பொது இடங்களிற்கு வர முடியாது!

Date:

மாகாணங்களிற்கிடையிலான போக்குவரத்து இன்று நள்ளிரவு முதல் முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது. இராணுவத்தளபதி சவேந்திர சில்வா இதனை தெரிவித்தார்.

இரண்டு வாரங்களிற்கு இது நடைமுறையில் இருக்கும்.

செப்ரெம்பர் 15ஆம் திகதிக்கு பின்னர் தடுப்பூசி அட்டைகள் இன்றி பொதுமக்கள் பொது இடங்களிற்குள் நுழைவது முழுமையாக தடைசெய்யப்படும்.

சுகாதார நடைமுறைகள் மிக இறுக்கமாக்கப்படும் என்றார்.

மாகாணங்களுக்கு இடையேயான பயணம் கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளது.

சுகாதாரம், துறைமுகங்கள், விவசாயம், ஆடைத்தொழிற்சாலை மற்றும் விமான நிலையங்கள்களிற்கு செல்பவர்கள் உட்பட அத்தியாவசிய தேவையுடையவர்கள் மாகாணங்களுக்கு இடையே பயணம் செய்ய அனுமதிக்கப்படுகிறது.

மாகாணங்களுக்கு இடையேயான பொது போக்குவரத்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

பொது மற்றும் தனியார் துறைகளில் ஊழியர் சேவைக்கு அழைக்கும் போது மாகாணங்களுக்கு வெளியே வசிக்கும் தேவையான ஊழியர்களை வரவழைக்க நிறுவன தலைவர்களுக்கு அதிகாரம் உள்ளது.

 

Share post:

spot_imgspot_img

More like this
Related

‘கணினிப் பிழை’ காரணமாக ஒப்பந்ததாரர்களுக்கு ரூ. 263 மில்லியன் தவறுதலாக அனுப்பப்பட்டதை இலங்கை வங்கி உறுதி செய்துள்ளது: நாமல்

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கொடுப்பனவுகள் இரட்டிப்பாக வழங்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை...

பிறந்தநாள் நிகழ்வில் முகத்தில் கேக் பூசிய தகராற்றில் 3 பேர் சுட்டுக்கொலை

உத்தர பிரதேசத்​தில் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது, முகத்​தில் கேக் பூசுவது...

7 எம்.பி.க்கள் பாஜகவில் இணைந்த தாக்கம்: ஆம் ஆத்மியில் இருந்து எம்.பி., எம்எல்ஏ.க்கள் விலகும் அபாயம்

ஆம் ஆத்மி கட்​சி​யின் மக்​களவை உறுப்பினர்களுடன் பஞ்​சாபின் ஆளும் கட்சி எம்​எல்​-ஏக்​களும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்