டெல்டா பிளஸ் தொற்றால் 3 பேர் பலி அரசு எச்சரிக்கை!

Date:

மஹாராஷ்டிர மாநிலத்தில் டெல்டா பிளஸ் வகை கொரோனா தொற்று காரணமாக 3 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. மஹாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையின் தாக்கம் குறைந்ததை அடுத்து பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில், உருமாற்றம் அடைந்த டெல்டா பிளஸ் வகை கொரோனா தொற்று காரணமாக, மஹாராஷ்டிர மாநிலத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில

தலைநகர் மும்பையைச் சேர்ந்த 63 வயது மூதாட்டி, டெல்டா பிளஸ் வகை கொரோனா தொற்றால் மாநிலத்தில் உயிரிழந்த முதல் நபர் ஆவார். ராய்கட் மாவட்டத்தைச் சேர்ந்த வயது முதியவர், ரத்தினகிரி மாவட்டத்தைச் சேர்ந்த மூதாட்டி ஆகியோர் டெல்டா பிளஸ் வகை தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதை அடுத்து, உயிரிழந்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டுபிடிக்கும் பணியில் சுகாதாரத் துறை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும் கொரோனா தடுப்புப் பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன. டெல்டா பிளஸ் வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதால், பொது மக்கள் அனைவரும் விழிப்புடன் இருக்கும்படி சுகாதாரத் துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

மஹிந்தவிற்கு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடமிருந்து அழைப்பாணை கிடைக்கவில்லையாம்

சர்ச்சைக்குரிய ஏர்பஸ் பரிவர்த்தனை தொடர்பாக, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும்...

ஈரான் தவறாக நடந்தால் மீண்டும் தாக்குவோம்: ட்ரம்ப்

ஈரானுடனான ஒரு ஒப்பந்தத்தின் கருத்தாக்கம் குறித்து தனக்குத் தெரிவிக்கப்பட்டதாகவும், ஆனால் அதன்...

எண்ணெய் உற்பத்தியை குறைத்த ஈரான்

அமெரிக்காவின் ஹோர்முஸ் ஜலசந்தி முற்றுகையால் ஏற்பட்ட அதிகரித்து வரும் சேமிப்பு நெருக்கடியைச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்