31.3 C
Jaffna
March 28, 2024
இலங்கை

வவுனியாவில் 84 பேருக்கு தொற்று!

வவுனியாவில் 84 பேருக்கு கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் இனங்காணப்பட்ட கோவிட் தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியோர், வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோர் மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையின் முடிவுகள் சில இன்று வெளியாகின.

அதில் நெளுக்குளம் பகுதியில் இருவருக்கும், சிறிநகர் பகுதியில் நான்கு பேருக்கும், அண்ணாநகர் பகுதியில் ஒருவருக்கும், அவுசலப்பிட்டிய பகுதியில் இருவருக்கும், தவசிகுளம் பகுதியில் நான்கு பேருக்கும், சின்னச்சிப்பிகுளம் பகுதியில் இருவருக்கும், நேரியகுளம் பகுதியில் இருவருக்கும், சின்னப்புதுக்குளம் பகுதியில் இருவருக்கும், கனகராயன்குளம் பகுதியில் கர்ப்பவதி பெண் ஒருவருக்கும், அரசடிக்குளம் பகுதியில் மூன்று பேருக்கும், இராசேந்திரங்குளம் பகுதியில் இருவருக்கும், தம்பனைபுளியங்குளம் பகுதியில் ஏழு பேருக்கும், கல்மடு பகுதியில் ஏழு பேருக்கும், சிறிராமபுரம் பகுதியில் ஒருவருக்கும், ஓமேக்கா ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் ஒருவருக்கும், கல்குண்ணாமடு பகுதியில் ஒருவருக்கும், மகாறம்பைக்குளம் பகுதியில் மூன்று பேருக்கும், சாந்தசோலை பகுதியில் மூன்று பேருக்கும், சிறைச்சாலை கைதிகள் ஐந்து பேருக்கும், சுகாதார திணைக்கள விடுதியில் மூன்று பேருக்கும், வவுனியா இலங்கை போக்குவரத்து சபையில் பணியாற்றும் ஒருவருக்கும், திருநாவற்குளம் பகுதியில் ஒருவருக்கும், சுந்தரபுரம் பகுதியில் ஒருவருக்கும், நெடுங்குளம் பகுதியில் ஒருவருககும், நெடுங்கேணி பகுதியில் ஆறு பேருக்கும், நெல்வேலிக்குளம் பகுதியில் ஒருவருக்கும், சிவபுரம் ஒருவருக்கும், செட்டிகுளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பதின்மூன்று பேருக்கும், போகவ்வேவ பகுதியில் ஒருவருக்கும், தாலிக்குளம் பகுதியில் ஒருவருக்கும், வைரவபுளியங்குளம் பகுதியில் ஒருவருக்கும் என 84 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தொற்றாளர்களை கோவிட் சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைப்பதற்கும், அவர்களுடன் தொடர்புடையவர்களை சுயதனிமைப்படுத்துவதற்கும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

தனிநபர் செலவீனம் அதிகரிப்பு

Pagetamil

ரொஷான் ரணசிங்க வழக்கை விசாரிக்க புதிய நீதிபதிகள் குழு!

Pagetamil

புத்தரின் படம் பொறித்த முடிவெட்டும் இயந்திரத்தை வைத்திருந்தவர் கைது!

Pagetamil

நுவரெலியாவில் சிக்கிய பெரும் போதைப்பொருள் கடத்தல்காரன்

Pagetamil

முல்லைத்தீவு சுகாதார சேவைகள் பணிப்பாளர் வீதி விபத்தில் பலி

Pagetamil

Leave a Comment