வவுனியாவில் 84 பேருக்கு தொற்று!

Date:

வவுனியாவில் 84 பேருக்கு கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் இனங்காணப்பட்ட கோவிட் தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியோர், வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோர் மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையின் முடிவுகள் சில இன்று வெளியாகின.

அதில் நெளுக்குளம் பகுதியில் இருவருக்கும், சிறிநகர் பகுதியில் நான்கு பேருக்கும், அண்ணாநகர் பகுதியில் ஒருவருக்கும், அவுசலப்பிட்டிய பகுதியில் இருவருக்கும், தவசிகுளம் பகுதியில் நான்கு பேருக்கும், சின்னச்சிப்பிகுளம் பகுதியில் இருவருக்கும், நேரியகுளம் பகுதியில் இருவருக்கும், சின்னப்புதுக்குளம் பகுதியில் இருவருக்கும், கனகராயன்குளம் பகுதியில் கர்ப்பவதி பெண் ஒருவருக்கும், அரசடிக்குளம் பகுதியில் மூன்று பேருக்கும், இராசேந்திரங்குளம் பகுதியில் இருவருக்கும், தம்பனைபுளியங்குளம் பகுதியில் ஏழு பேருக்கும், கல்மடு பகுதியில் ஏழு பேருக்கும், சிறிராமபுரம் பகுதியில் ஒருவருக்கும், ஓமேக்கா ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் ஒருவருக்கும், கல்குண்ணாமடு பகுதியில் ஒருவருக்கும், மகாறம்பைக்குளம் பகுதியில் மூன்று பேருக்கும், சாந்தசோலை பகுதியில் மூன்று பேருக்கும், சிறைச்சாலை கைதிகள் ஐந்து பேருக்கும், சுகாதார திணைக்கள விடுதியில் மூன்று பேருக்கும், வவுனியா இலங்கை போக்குவரத்து சபையில் பணியாற்றும் ஒருவருக்கும், திருநாவற்குளம் பகுதியில் ஒருவருக்கும், சுந்தரபுரம் பகுதியில் ஒருவருக்கும், நெடுங்குளம் பகுதியில் ஒருவருககும், நெடுங்கேணி பகுதியில் ஆறு பேருக்கும், நெல்வேலிக்குளம் பகுதியில் ஒருவருக்கும், சிவபுரம் ஒருவருக்கும், செட்டிகுளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பதின்மூன்று பேருக்கும், போகவ்வேவ பகுதியில் ஒருவருக்கும், தாலிக்குளம் பகுதியில் ஒருவருக்கும், வைரவபுளியங்குளம் பகுதியில் ஒருவருக்கும் என 84 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தொற்றாளர்களை கோவிட் சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைப்பதற்கும், அவர்களுடன் தொடர்புடையவர்களை சுயதனிமைப்படுத்துவதற்கும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

மட்டு சிறையிலிருந்து கைதி தப்பியோட்டம்

மட்டக்களப்பு சிறைச்சாலையில் தண்டனை பெற்ற சிறைக்கைதி ஒருவர் இன்று வியாழக்கிழமை (14)...

விஜய்யை வாழ்த்தியதால் அநுரவுக்கு வந்த சிக்கல்!

சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்க்கு ஜனாதிபதி அனுர...

கோட்டாவின் கொடூர பழிவாங்கலுக்கு பரிகாரம்: ஷானி அபேசேகரவிற்கு பதவி உயர்வு!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் இயக்குநரான ஷானி அபேசேகரவை, காவல்துறை பிரதிப் பொலிஸ்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்