27.5 C
Jaffna
February 5, 2025
Pagetamil
மலையகம்

மலையகத்தில் நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு – நீர்மட்டமும் உயர்வு

மத்திய மலை நாட்டில் தொடர்ச்சியாக நிலவி வரும் சீரற்ற காலநிலையினை தொடர்ந்து நுவரெலியா மாட்டத்தில் கடும் மழை பெய்துவருகிறது.

நேற்று இரவு முதல் நுவரெலியா மாவட்டத்தில் பல பகுதியகளில் தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக ஆறுகள் நீரோடைகள் ஆகிய பெருக்கெடுத்துள்ளன.

நீரேந்தும் பிரதேசங்களில் அதிக மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதன் காரணமாக நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் உயர்ந்துள்ளன.

இதனால் மஸ்கெலியா – மவுஸ்ஸாக்கலை நீர்த்தேக்கத்தின் மூன்று வான்கதவுகளும், கெனியோன் நீர்த்தேக்கத்தில் இரண்டு வான் கதவுகளும் இன்று (12) காலை திறக்கப்பட்டன.

காசல்ரீ நீர்த்தேக்க பகுதியில் இன்று காலை 70 மில்லிமீற்றர் இற்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளன.

இதனால் காசல்ரீ நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் உயர்ந்து வான் பாயும் அளவினை எட்டியுள்ளன.

இதே வேளை நோர்ட்டன் பிரிட்ஜ் பகுதியில் அமைந்துள்ள விமல சுரேந்திர நீர்த்தேக்கப் பகுதியில் கடுமையான மழை பெய்து வருவதானால் அந்த நீர்த்தேக்கத்தில் ஆறு கதவுகள் ஊடாக நீர் வான் பாய்கின்றன.

எனவே நீர்த்தேக்கத்திற்கு கீழ் தாழ் நிலப்பகுதியில் வாழும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளன.

நீர்த்தேக்கங்கள் தற்போது நிறைந்த காணப்படுவதனால் உச்ச அளவில் மின் உற்பத்தி நடைபெறுவதாக மின்சாரசபை அதிகாரியொருவர் தெரிவித்தார்.

க.கிஷாந்தன்-

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஹட்டன் கொட்டகல வைத்திய சாலையில் இறந்தவரை இனங்காண பொலிஸ் உதவி கோரல்

east tamil

கண்டி ஹோட்டலில் குரங்குகளின் குறும்பு: வேடிக்கையில் மக்கள்

east tamil

மண்சரிவு அபாயம் – நுவரெலியாவில் 36 பேர் வெளியேற்றம்

east tamil

காதல் தகராறு முற்றி விபரீதம்… நீண்டநாள் காதலியின் உயிரைக்குடித்த கலாபக்காதலன்!

Pagetamil

நுவரெலியாவில் சுற்றுலாப் பயணிகளுக்கான புதிய ஈர்ப்பிடம்

east tamil

Leave a Comment