ஒலிம்பிக்கில் பங்கேற்ற ஹாக்கி வீராங்கனை ரஜினிக்கு ஆந்திர அரசு நிதி உதவி!

Date:

ஒலிம்பிக்கில் பங்கேற்ற ஹாக்கி வீராங்கனை ரஜினிக்கு ஆந்திர அரசு ரூ .25 லட்சம் நிதி உதவி

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம், எர்ரவாரி பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரஜினி. இவர் சமீபத்தில் டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக்கில் மகளிர் ஹாக்கியில் 4-வது இடம் பிடித்த இந்திய அணியில் இடம் பெற்றார். வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் இந்திய மகளிர் அணியிடம் தோல்வியடைந்த போதிலும் அவர்களின் செயல்திறனால் ரசிகர்கள் மனதை வென்றனர். தொடர்ந்து, ஹாக்கி வீராங்கனை ரஜினி நேற்று தனது பெற்றோருடன் குண்டூரில் உள்ள அலுவலகத்தில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை சந்தித்தார்.

அவரை பூங்கொத்து கொடுத்து முதல்வர் ஜெகன் வரவேற்றார். அப்போது ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் சிறப்பாக விளையாடிய ரஜினியை ஜெகன் வெகுவாக பாராட்டினார். பின்னர் ரஜினிக்கு மாதம் ரூ .40 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கவும், திருப்பதியில் 1,000 கஜத்தில் வீட்டு மனைப்பட்டாவும், ரஜினியின் வீட்டில் ஒருவருக்கு அரசு வேலையும், ரூ .25 லட்சம் நிதி உதவியும் வழங்குவதாக அறிவித்தார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

போக்குவரத்து விதிகளை மீறி ரிக்ரொக் வீடியோ: 3 யுவதிகள் கைது!

புத்தல-அம்பகொலவெவ வீதியில் தலைக்கவசம் அணியாமல், போக்குவரத்து விதிகளை மீறி மோட்டார் சைக்கிள்...

2 அணிகளாகப் பிரிந்தது அதிமுக: தற்காலிக பேரவைத் தலைவரிடம் பழனிசாமி, வேலுமணி தரப்பினர் தனித்தனியே கடிதம்

சட்டப்பேரவை அதிமுக குழுத் தலைவர் யார் என்பதில் பொதுச் செயலாளர் பழனிசாமி...

பொலிசார் பௌத்தர்களென்பதால் தையிட்டி விகாராதிபதிக்கு பயந்து செயற்படுகிறார்கள்: எம்.ஏ.சுமந்திரன்

பொலிஸார் பௌத்தர்களாக இருப்பதனால் , பௌத்த பீடாதிபதிகளுக்கு பயந்து சட்டத்தை நடைமுறைப்படுத்த...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்