கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட 19 வயது யுவதி!

Date:

வவுனியா ஆச்சிபுரம் பகுதியில் கிணற்றில் இருந்து 19 வயது யுவதியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

யுவதி நேற்று இரவு தனது வீட்டில் உறங்கச் சென்றுள்ளார். எனினும் இன்று காலை முதல் அவரை காணாத நிலையில் அவரது உறவினர்கள் தேடியுள்ளனர்.

இதன்போது அருகில் உள்ள கிணற்றில் சடலமாக கிடந்தமை கண்டறியப்பட்டது.

சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த மோகன் திலக்சனா (19) என்ற யுவதியே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

இன்றைய ராசி பலன் | 10.08.2026

♈ மேஷம்: புதிய வாய்ப்புகள் கிடைக்கும் நாள். பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். ♉...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்