ஊசி போட பீரங்கிப்படையை பாவிக்கவில்லை!

Date:

கோவிட் -19 தடுப்பூசிகளில் ஈடுபட்டுள்ள இராணுவ மருத்துவப் பிரிவினர் மருத்துவக் கல்வியைப் பெற்றுள்ளனர் என பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன கூறுகிறார்.

மருத்துவ கல்வி கற்காத குழு தடுப்பூசி போடுவதாக குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவது ஆதாரமற்றது என்று பாதுகாப்பு செயலாளர் கூறினார்.

ஜெனரல் குணரத்ன நேற்று நடந்த ஊடக சந்திப்பில் பேசுகையில், தடுப்பூசி செலுத்தும் திட்டத்திற்கு பீரங்கிப் படை ஒருபோதும் பயன்படுத்தப்படவில்லை என்றும், தடுப்பூசி போடுவதற்கு பொதுமக்கள் பயப்பட வேண்டாம் என்றும் கூறினார்.

சுகாதாரத் துறை ஊழியர்களால் தொடங்கப்பட்ட வேலைநிறுத்த நடவடிக்கைகளைத் தொடர்ந்து, தடுப்பூசி திட்டத்தில் இலங்கை இராணுவ மருத்துவப் படையினர் இணைக்கப்பட்டதாக பாதுகாப்புச் செயலாளர் கூறினார்.

2,000-3,000 என செலுத்தப்பட்ட நாளாந்த தடுப்பூசிகள் 500,000 ஆக அதிகரிக்கப்பட்டது என்றார்.

spot_imgspot_img

More like this
Related

அதிபர்களுக்கு அநீதி : கிழக்கு ஆளுநர் செயலகம் முன்னாள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் தொடங்கியது!

கிழக்கு மாகாணத்தில் நீண்டகாலமாக கடமைநிறைவேற்று அதிபர்களாக பணியாற்றி வரும் கல்வியாளர்களுக்கு இழைக்கப்பட்டுவரும்...

அதிகாரப் பகிர்வை வலுப்படுத்த புதிய திட்டம்: டக்ளஸ் தேவானந்தா முன்வைப்பு

மாகாண சபைகளின் முதலமைச்சர்களுக்கு நாடாளுமன்றிலும் அமைச்சரவையிலும் இடமளிக்கப்பட வேண்டும் -  டக்ளஸ்...

கனடா பொருட்களுக்கு 50% வரி விதிக்கும் ட்ரம்ப்

அடுத்த மாதம் முதல் பல்வேறு கனேடியப் பொருட்கள் மீது அமெரிக்கா கூடுதலாக...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்