வவுனியா ஆச்சிபுரம் பகுதியில் கிணற்றில் இருந்து 19 வயது யுவதியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
யுவதி நேற்று இரவு தனது வீட்டில் உறங்கச் சென்றுள்ளார். எனினும் இன்று காலை முதல் அவரை காணாத நிலையில் அவரது உறவினர்கள் தேடியுள்ளனர்.
இதன்போது அருகில் உள்ள கிணற்றில் சடலமாக கிடந்தமை கண்டறியப்பட்டது.
சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த மோகன் திலக்சனா (19) என்ற யுவதியே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.



