கௌதாரிமுனை சீனப்பண்ணைக்கும் கடற்தொழிலாளர் சங்கத்திற்குமிடையில் ஒப்பந்தம்!

Date:

கௌதாரி முனை விநாயகர் கடற் தொழிற்சங்க உறுப்பினர்கள் ஏழு பேருக்கு அட்டைப் பண்ணைக்கான அனுமதிகள் இன்று வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வு இன்று பூநகரி பகுதியில் அமைந்துள்ள இலங்கை தேசிய நீர் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் வடமாகாணத்திற்கான பிராந்திய அலுவலகத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்ற நிகழ்விலையே குறித்த அனுமதிள் வழங்கிவைக்கப்பட்டது

52 பேர் குறித்த அனுமதியை கோரி உள்ள நிலையில் 7 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதுடன் எதிர்வரும் திங்கட்கிழமை அட்டைப் பண்ணைக்கான பணி ஆரம்பித்து வைக்கப்பட உள்ளது இதில் அனுமதிக்கு கோரிய 52 பேரும் அட்டைப்பண்னைக்குரிய பணிகள் ஆரம்பிக்க முடியும். மிகுதியானவர்களுக்கு அனுமதி விரைவில் வழங்கப்படும். அனுமதி இல்லை என்பதற்காக அட்டைப் பண்ணையினை ஆரம்பிக்காமல் இருக்க வேண்டாம் என அமைச்சர் தெரிவித்தார்.

அதனை விட குறித்த பகுதியில் சீன நிறுவனத்தால் நடத்தப்படும் அட்டைப் பண்ணைக்கான அனுமதி கௌதாரி முனை விநாயகர் கடற்றொழில் சங்கத்திற்கு அனுமதி வழங்கப்பட்டு சீன நிறுவனத்திற்கு ஒப்பந்தம் செய்யப்படுவதாகவும் தெரிவித்தார்

இன் நிகழ்வில் இலங்கை தேசிய நீர் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையின் வட மாகாண உதவிப் பணிப்பாளர் பி.நிருபராஜ் பூநகரி பிரதேச செயலாளர் கிருஸ்னேந்திரன் மற்றும் துறைசார் அதிகாரிகள் மீனவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

spot_imgspot_img

More like this
Related

மஹிந்த மனைவிக்கு சிங்கப்பூரில் பரிசோதனையாம்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியான ஷிராந்தி ராஜபக்ஷ, நேற்று காலை...

கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலயத்தின் புதிய அதிபராக ஏ.ஜி.எம். ரிசாத் பொறுப்பேற்பு

கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் அதிபராக கடமையாற்றிய ஏ.ஜி.எம். ரிசாத்,...

இழந்துபோன எமது அரசியல் மறுமலர்ச்சியை மீட்டெடுப்போம்”: மருதமுனையில் சமூக நீதிக் கட்சியின் பொதுக் கூட்டம்

"இழந்துபோன எமது அரசியல் மறுமலர்ச்சியை மீட்டெடுக்கும்" எனும் கருப்பொருளில் சமூக நீதிக்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்