தமிழகத்திலிருந்து கடல்மார்க்கமாக நுழைந்த இளைஞன் குருநகரில் அடையாளம் காணப்பட்டார்!

Date:

இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக சட்டவிரோதமாக நுழைந்த இளைஞன் ஒருவர் இன்று யாழ்ப்பாணம் குருநகரில் அடையாளம் காணப்பட்டார்.

25 வயதான இவர் நேற்று முன்தினம் கடல்மார்க்கமாக நாட்டுக்குள் நுழைந்துள்ளார்.

குருநகர் கிழக்கு, ரெக்கிளமேசன் பகுதியில் வீடொன்றில் அவர் இன்று பொலிசாரால் அடையாளம் காணப்பட்டார்.

12 வயதில் குடும்பமாக அவர் விமானம் மூலம் இந்தியா சென்றுள்ளார். தற்போது அங்கு தந்தை உயிரிழந்து விட்டதாகவும், தாயார் சுகவீனமடைந்துள்ளதாகவும், குடும்ப கஸ்ரம் காரணமாக தொழில் செய்ய குருநகரிற்கு வந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

அவர் வீட்டில் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

மட்டக்களப்பில் விற்பனைக்கு உள்ள மோட்டார் சைக்கிளை ஓடிப் பார்த்து வாங்குவதாக திருடிச் சென்ற 3 மோட்டார் சைக்கிளுடன் ஒருவர் கைது

மட்டக்களப்பில் விற்பனைக்கு உள்ள மோட்டார் சைக்கிள் வழங்குவதாக தெரிவித்து அதனை ஓடிப்பார்பதாக...

2 சிப்பாய்கள் கொல்லப்பட்டதால் ஆத்திரமடைந்துள்ள அமெரிக்கா!

இஸ்லாமியக் குடியரசுடன் மீண்டும் தொடங்கிய மோதல்களுக்குப் பிறகு ஏற்பட்ட முதல் அமெரிக்க...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்