பருத்தித்துறையில் 2 ஆலயங்களிற்கு சீல்: திருவிழாவிற்கு போனவர் கொரோனாவால் மரணம்!

Date:

பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இரண்டு கோயில்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

பருத்தித்துறை சுப்பர்மடம் முனியப்பர் கோயில், பருத்தித்துறை சிவன் கோயில் என்பனவே தனிமைப்படுத்தப்பட்டன. அங்கு 14 நாட்களிற்கு வழிபாடுகள் மேற்கொள்ள முடியாது.

முனியப்பர் கோயிலில் நேற்று தேர்த்திருவிழா நடைபெற்றது. இதில் பெருமளவான பக்தர்கள் கலந்து கொண்டிருந்ததுடன், சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்பட்டிருக்கவில்லை. பலரும் முகக்கவசம் அணிந்திருக்கவில்லை. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களிலும் பகிரப்பட்டிருந்தது.

இது தொடர்பில் பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவினர் கவனம் செலுத்தி நடவடிக்கை மேற்கொண்டனர்.

21ஆம் திகதி வரை கோயில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. வழிபாடுகள் மேற்கொள்ள முடியாது.

இந்த ஆலயத்தில் திருவிழாவில் நேற்று முன்தினம் வரை கலந்து கொண்டிருந்த ஒருவர் (54 வயது) நேற்று திடீர் சுகவீனமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்தார். அவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

பருத்தித்துறை சிவன் கோயிலில் கட்டுப்பாடுகளை மீறி வெளிவீதியில் திருவிழா நடத்தப்பட்டதால், 21ஆம் திகதி வரை அந்த கோயிலும் தனிமைப்படுத்தப்பட்டது.

ஆலய நிர்வாகிகள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

தமது ஆலய தனிமைப்படுத்தலை விலக்கிக் கொள்ள அரசியல் தரப்புக்களின் உதவியையும் ஆலயத்துடன் நெருக்கமானவர்கள் நாடியதாக தெரிய வருகிறது. எனினும், அரசியல் தரப்பினர் சுகாதார விதிமுறையை மீறி அழுத்தம் கொடுக்க மறுத்து விட்டதாக தெரிய வருகிறது.

spot_imgspot_img

More like this
Related

இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட நகைகள் இல்லாமல் வந்த கொண்ட ரஞ்சி

ராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து நாடு கடத்தப்பட்ட, பிரபல...

ஈஸ்டர் தாக்குதல் விசாரணை நிறைவு

2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறன்று நாட்டின் கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும்...

வெப்பமான வானிலை குறித்து ‘அம்பர்’ எச்சரிக்கை!

வளிமண்டலவியல் திணைக்களத்தின் இயற்கை அனர்த்தம் தொடர்பான முன்னெச்சரிக்கை பிரிவினால் வெப்பமான வானிலை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்