ஒரு வழியுமில்லை: செல்வச்சந்நிதிக்கு செல்ல வீண் முயற்சி வேண்டாம்!

Date:

வரலாற்றுச் சிறப்புமிக்க தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய பெருந்திருவிழா இன்று ஆரம்பமாகவுள்ள நிலையில் அனுமதியளிக்கப்படாத எவரும் ஆலயத்துக்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை.

ஆலய நிர்வாகம், உபயகாரர், தொண்டு செய்பவர்கள் என 100 பேருடன் ஆலயத்திற்குள்ளேயே திருவிழா நடத்த இம்முறை அனுமதிக்கப்பட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்றை கவனத்தில் கொண்டு, பக்தர்கள் ஆலயத்திற்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பது ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டு, பகிரங்கமாக அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், இதனை கருத்தில் கொள்ளாமல் இன்று ஆலயத்துக்குச் சென்ற பல நூற்றுக் கணக்கான பக்தர்கள் பொலிஸாரினால் திருப்பி அனுப்பப்பட்டனர்.

தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய கொடியேற்றம் இன்று இரவு 8.00 மணிக்கு இடம்பெறுகிறது.

அனுமதிக்கப்பட்ட 100 பேரும் பிசிஆர் அறிக்கையுடன் மட்டுமே உள்நுழைய அனுமதிக்கப்படுவார்கள். இதனால் மக்கள் வீணாக கோயிலுக்கு சென்று, திருப்பி அனுப்பப்படும் அசௌகரியத்தை சந்திக்காமல் வீட்டில் இருக்குமாறு கோரப்பட்டுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

ஏறாவூர் மாரியமன் ஆலயத்தி ஜயங்கேணி வாள்வெட்டு குழு தாக்குதலில் 4 பேர் படுகாயம் தாக்குதல் மேற்கொண்ட ஒரு வரை மடக்கி பிடிபு ஏனைவர் தப்பி ஓட்டம்

ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள மைலம்பாவெளி விபுலானந்தபுரம்  மாரியம்மன் ஆலயத்தில்  அன்னதானம் வழங்கியவர்கள்...

காத்தான்குடியில் வீடு நிர்மாண பணியின் போது தூண் இடிந்து விழுந்ததில் கட்டிட தொழிலாளி ஒருவர் உயிரிழப்பு

காத்தான்குடி பிரதேசத்தில் வீடு ஒன்று நிர்மாண பணியின்போது தூண் இடிந்து வீழ்ந்ததில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்