728,000 அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசிகள் நாட்டை வந்தடைந்தன!

Date:

ஜப்பானால் வழங்கப்பட்ட 728,000 அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசிகள் இன்று நாட்டை  வந்தடைந்தது.

தடுப்பூசியை ஏற்றி வந்த UL-455 ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் மாலை 4.17 மணியளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது.

ஜப்பானில் நரிதா விமான நிலையத்தில் இருந்து காலை 11.23 மணியளவில் புறப்பட்ட விமானத்தில் உலக சுகாதார அமைப்பின் அதிகாரிகள் குழுவும் வந்தது.

அதன்படி, எட்டு நாட்களில் இலங்கை 1.4 மில்லியன் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசிகளைப் பெற்றுள்ளது.

கடந்த சனிக்கிழமை, இலங்கைக்கு 728,460 டோஸ் அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி கிடைத்தது, இது ஜப்பான் அரசாங்கத்தின் நன்கொடையாகும்.

கடந்த வாரம் வந்த தடுப்பூசி டோஸ்கள் மேற்கு மாகாணத்தில் வசிப்பவர்களிற்கு இரண்டாவது டோஸாக ஏற்றப்பட்டது. ஏனையவை, கேகாலையில் வசிப்பவர்களுக்கு தடுப்பூசி போட பயன்படுத்தப்பட்டது.

spot_imgspot_img

More like this
Related

ஈரான் தூதரை அழைத்து கண்டனம் தெரிவித்தது ஓமான்

தன் மீது நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து, ஈரான் தூதரிடம் ஓமான் ஞாயிற்றுக்கிழமை...

மாணவர்களை டெங்கு காய்ச்சலிலிருந்து பாதுகாக்க, சீருடை விதிகளைத் தளர்த்த பாடசாலைகளுக்கு அனுமதி

டெங்குவிலிருந்து மாணவர்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, நுளம்புக்கடியிலிருந்து சிறந்த பாதுகாப்பை...

சம்பந்தனுக்கு பொது இடத்தில் நினைவுத்தூபி அமைக்கக்கூடாது

இலங்கை தமிழரசு கட்சியின் மறைந்த முன்னாள் தலைவர் இரா. சம்பந்தன் இரண்டு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்