சுகாதாரத்துறையினரும் போராட்டம்!

Date:

கோவிட் -19 ஆபத்து கொடுப்பனவை தொடர்ந்து வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு சாதகமான பதில் இதுவரை வழங்கப்படாததை எதிர்த்து இன்று சுகாதார தொழிற்சங்கங்கள் கூட்டு வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதிக்கின்றன.

அரச மருத்துவ ஆய்வக தொழில் வல்லுனர் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் கூறுகையில், சுகாதாரத்துறையில் உள்ள பல தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளன. நேற்று அதிகாரிகளுடன் நடத்திய கலந்துரையாடலில் எந்த பலனுமிருக்கவில்லை என்றார்.

அனைத்து அரச சேவையாளர்களையும் கடமைக்கு அழைப்பது தொடர்பில் அண்மையில் வெளியிடப்பட்ட சுற்றுநிருபத்துக்கும் எதிர்ப்பு தெரிவித்தார்.

ஆறு முக்கிய கோரிக்கைகள் தொடர்பான சுகாதார செயலாளருடன் கலந்துரையாடல் நடத்தப்பட்டதாக குமுதேஷ் கூறினார்.

கோரிக்கைகள் தொடர்பான பதில்கள் அதிருப்தி அளிக்கும் வகையில் இருப்பதால், திட்டமிட்டபடி இன்று தொழிற்சங்க நடவடிக்கை தொடங்கப்படும் என்று அவர் கூறினார்.

சுகாதார அமைச்சகம் உடனடியாக ஒரு முடிவை எட்டும் என்று நம்புவதாகவும், பொருத்தமான உடன்பாடுகள் எட்டப்பட்டால் மட்டுமே தொழிற்சங்க நடவடிக்கை நிறுத்தப்படும் என்றும் கூறினார்.

spot_imgspot_img

More like this
Related

முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவின் விபரீத முடிவுக்கு இதுதான் காரணமா?

முன்னாள் காவல்துறைமா அதிபர் சி.டி. விக்ரமரத்ன நேற்று காலை (17) மலாபேயில்...

ஹரக்கட்டா விவகாரம்: பிக்கு ஊடாக உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு இலஞ்சப்பணம் பரிமாற்றம்?

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் தலைவரான 'ஹரக்கட்டா'வின் மனைவியிடமிருந்து இலஞ்சமாகப் பெறப்பட்ட 1,200...

பிரதியமைச்சர் எரங்க குணசேகர, ஜகத் மனுவர்ண எம்.பிக்கு பிடியாணை

நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்