தமிழ் அரசியல் கைதிகளிற்கும் தடுப்பூசி ஏற்றப்பட்டது!

Date:

கொழும்பு புதிய மகசின் சிறைச்சாலையில் உள்ள அனைத்து கைதிகளுக்கும் ‘சினோபாம்’ தடுப்பூசி இன்றைய தினம் ஏற்றப்பட்டது. அந்த வகையில்  மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 36 தமிழ் அரசியல் கைதிகளும் குறித்த தடுப்பூசியை பெற்றுக்கொண்டனர்.

தடுப்பூசியை எற்றல் தொடர்பான மருத்துவர்களின் விளக்கமளிப்புக்களுடன் கைதிகளுக்கு ஊசி ஏற்றும் நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாக அரசியல் கைதிகளின் உறவுகள் தெரிவித்தனர்.

கோவிட் 19 தடுப்பூசி ஏற்றிக்கொள்வதற்கான சுயவிருப்ப ஒப்புதல் படிவம் ஒன்று நிரப்பப்பட்டு கையொப்பம் பெறப்பட்ட பின்னரே அவர்களுக்கான ஊசி ஏற்றப்பட்டுள்ளது.
மேலும் இரண்டாவது தடுப்பூசியை ஏற்றுவது தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவித்தனர்.

நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள  தமிழ் அரசியல் கைதிகளுக்கு தடுப்பூசியை வழங்குமாறு அவர்களின் உறவுகள் அரசிடம் பலமுறை கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இன்று கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலை, வெலிக்கடை சிறைச்சாலைகளிலும் கைதிகளிற்கு தடுப்பூசி ஏற்றப்பட்டது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

இலங்கை கிரிக்கெட் தலைமை மாற்றம் பற்றி விளையாட்டு அமைச்சரின் பதில்!

இலங்கை கிரிக்கெட் சபையில் தலைமை மாற்றம் ஏற்படக்கூடும் என வரும் செய்திகள்...

மின்னல் தாக்கி 2 விவசாயிகள் பலி

திங்கட்கிழமை (27) மாலை பெய்த கனமழையைத் தொடர்ந்து விஜயபுரப் பகுதியில் மின்னல்...

ஈரானின் புதிய வரைபை ஆராய்கிறது அமெரிக்கா

பிராந்தியத்திலிருந்து எரிசக்தி விநியோகம் குறைந்துள்ள நிலையில், மோதல் ஒரு முட்டுக்கட்டையில் நீடிப்பதால்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்