29.5 C
Jaffna
April 19, 2024
முக்கியச் செய்திகள்

11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்ட வழக்கில் முன்னாள் கடற்படை தளபதிக்கு எதிராக வழக்கு தொடரப்படாது!

11 இளைஞர்கள் கடத்தல் வழக்கில் முன்னாள் கடற்படை தளபதி  வசந்த கரன்னகொட மீதான குற்றச்சாட்டுகளை சட்டமா அதிபர் திணைக்களம் தொடரப்போவதில்லை என்று சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினம் இன்று நீதிமன்றங்களுக்கு அறிவித்தார்.

கொழும்பு மற்றும் அதை அண்டிய பகுதிகளில் 2008-2009 காலப்பகுதியில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் போனது தொடர்பாக 2019 இல் குற்றப் புலனாய்வுத் துறையினால், முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொடவிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.

11 பேர் கடத்தல், சித்திரவதை, மிரட்டி பணம் பறித்தல் மற்றும் சதி செய்த வழக்கில் கரன்னகொட மற்றும் 13 பேரை குற்றஞ்சாட்ட அப்போதைய சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா முடிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஈரானுக்குள் இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல்!

Pagetamil

திருகோணமலையையும், கிழக்கையும் தமிழர்கள் இழந்தது சம்பந்தனின் அரசியலாலேயே: க.வி.விக்னேஸ்வரன்!

Pagetamil

முன்னாள் அமைச்சர் பாலித தெவரப்பெரும மின்சாரம் தாக்கி பலி

Pagetamil

இஸ்ரேலுக்குள் ஏவுகணை, ட்ரோன் தாக்குதல்: பதிலடியை ஆரம்பித்தது ஈரான்!

Pagetamil

தமிழ் பொதுவேட்பாளர்: தென்னிலங்கை சக்திகளின் சதியா?

Pagetamil

Leave a Comment