11 இளைஞர்கள் கடத்தல் வழக்கில் முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னகொட மீதான குற்றச்சாட்டுகளை சட்டமா அதிபர் திணைக்களம் தொடரப்போவதில்லை என்று சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினம் இன்று நீதிமன்றங்களுக்கு அறிவித்தார்.
கொழும்பு மற்றும் அதை அண்டிய பகுதிகளில் 2008-2009 காலப்பகுதியில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் போனது தொடர்பாக 2019 இல் குற்றப் புலனாய்வுத் துறையினால், முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொடவிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.
11 பேர் கடத்தல், சித்திரவதை, மிரட்டி பணம் பறித்தல் மற்றும் சதி செய்த வழக்கில் கரன்னகொட மற்றும் 13 பேரை குற்றஞ்சாட்ட அப்போதைய சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா முடிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1