கிளிநொச்சியில் கொரோனா வைத்தியசாலைகள் நிரம்பின: ஒரே நாளில் 68 தொற்றாளர்கள்!

Date:

கிளிநொச்சி கிருஸ்ணபுரத்தில் உள்ள வட மாகாண தொற்று நோய் வைத்தியசாலை
மற்றும் பாரதிபுரம் கொரோனா வைத்தியசாலை என்பன கொரோனா நோயாளிகளால்
நிரம்பியுள்ளதாக மாவட்ட சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

நாளுக்கு நாள் வடக்கில் அதிகரித்து வருகின்ற தொற்றாளர்களால் இந் நிலைமை
ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கும் சுகாதார தரப்பினர்கள் எதிர்வரும் நாட்கள்
நெருக்கடி மிக்கதாக அமையும் எனவும் தெரிவித்துள்ளனர்.

கிருஸ்ணபுரம் தொற்று வைத்தியசாலையில் மற்றும் பாரதிபுரம் கொரோனா
வைத்தியசாலைகளில் நோயாளிகளால் நிரம்பியிருப்பதனால் தற்போது முறுகண்டியில்
அமைந்துள்ள கொரோனா வைத்தியசாலைக்கு நோயாளர்கள் அனுப்பபட்டு வருகின்றனர்.அங்கு பெண்கள் மாத்திரமே அனுப்ப முடியும் எனவும் சுகாதார தரப்பு
தெரிவித்துள்ளது.

இதே வேளைகிளிநொச்சி மாவட்டத்தில் நேற்று (03) 68 கொவிட் 19
தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என பிராந்திய தொற்று நோயியலாளர்
மருத்துவர் நிமால் அருமைநாதன் தெரிவித்துள்ளார்.

நேற்று மாவட்டத்தில் முழங்காவில்,ஜெயபுரம், கரைச்சி, கண்டாவளை என
மாவட்டத்தில் பரவலாக தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி அறிவியல்நகர் ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் 25 பேர்,
அறிவியல்நகரில் உள்ள மத்திய வங்கியின் பிராந்திய அலுவலகத்தில் இரண்டு என
பரலாக தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ளனர்.

இதன்படி கடந்த யூலை மாதம் தொடக்கம் இன்று வரையான காலத்தில் 445 பேருக்கு
மேல் கிளிநொச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

அமெரிக்க- ஈரான் சண்டை தொடர்கிறது!

கடந்த மாத போர் நிறுத்தத்தை முற்றிலுமாகச் சிதைத்த, ஒரு வார காலமாக...

கழிவு அகற்றும் உழவு இயந்திர பெட்டியில் பாதையாத்திரைகளுக்கான உணவு பொருட்கள் எடுத்துச் சென்ற வழங்கிய மட்டு மாநகர சபை

கதிர்காமம் புனித பாதை யாத்திரைகளுக்கு  காட்டுப்பகுதியில் செல்பவர்களுக்கு மட்டக்களப்பு மாநகரசபையின் குப்பை...

மியான்மர் கடற்கரையில் இரு அகதி படகுகள் மாயம்: 500-க்கும் மேற்பட்டோர் காணாமல் போனதாக ஐ.நா. தகவல்

மியான்மரில் நிலவும் வன்முறையிலிருந்து தப்பிச் சென்ற ரோஹிங்கியா அகதிகளை ஏற்றிச் சென்ற...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்