29.5 C
Jaffna
April 19, 2024
மருத்துவம்

இயற்கை மருத்துவத்தின் மூலம் தாய்ப்பால் சுரக்க செய்வது எப்படி…

பாலூட்டுதல் என்பது தாய்க்கும் சேய்க்கும் இடையேயான அன்பான பிணைப்பு. குழந்தைக்கு கிடைக்கும் முதல் அமுதமும் இதுதான். பிறந்த குழந்தைக்கு தாய்ப்பாலின் அவசியம் குறித்து ஆயுர்வேதம் சிறப்பாக கூறுகிறது. பிறந்த நாள் தொட்டு குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்து மார்போடு அணைத்து தாய்க்கு ஆயுர்வேதம் வலியுறுத்துகிறது. அதற்கேற்ப நவீன அறிவியலும் குழந்தைக்கு கொலஸ்ட்ரம் மற்றும் தாய்ப்பாலின் முக்கியத்துவம் குறித்து சொல்கிறது. இன்று தாய்ப்பால் சுரப்பு குறைவதும், தாய்ப்பால் வற்றிய நிலையில் இருப்பதும் இயல்பாக எதிர்கொள்கிறார்கள்

தாய்ப்பால் ஊட்டுதல் என்பது ..

பாலூட்டுதல் என்பது தாய் தனது குழந்தைக்கு உணவளிக்க ஆகும் காலத்தை விவரிப்பது. குழந்தைகளுக்கு உணவளிப்பதில் பால் உற்பத்தி அவசியம். இந்த கட்டத்தில் புதிதாக பிறந்த குழந்தைகளின் வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்தை அளிக்க தாய்ப்பால் அவசியமாகிறது.

குழந்தையின் வளர்ச்சி ஆரோக்கியத்தில் நேரடி தாக்கத்தை தாய்ப்பால் ஏற்படுத்துகிறது. தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகள் வாழ்நாள் முழுவதும் நோய் எதிர்ப்பு சக்தியை பெறுகிறார்கள். தாய்ப்பால் என்பது கர்ப்பகாலத்தில் தொடங்குகிறது. கர்ப்பிணி பெண் எடுத்துகொள்ளும் ஆரோக்கியமான உணவுகளின் செயல்பாட்டு ஆரோக்கியமான தாய்ப்பால் சுரப்பிலும் பங்கு வகிக்கிறது.

தாய்ப்பாலை ஊக்குவிக்கும் உணவு

தாய்ப்பால் சுரப்புக்கு உணவுகளில் இனிப்பு, புளிப்பு, உப்பு, இறைச்சி, சூப் நிறைந்த உணவுகளை சேர்க்க வேண்டும். இளந்தாய்மார்கள் தினமும் 3 அல்லது 4 கப் வரை பால் சேர்க்க வேண்டும். உணவில் நெய் சேர்க்க வேண்டும். அரிசி உணவு, பெருங்காயம், பூண்டு, வெங்காயம், பார்லி, கோதுமை, நவர அரிசி, இலேசாக புளித்த பானம், தேங்காய், ஜாதிக்காய் போன்ற தாய்ப்பாலை ஊக்குவிக்கும் உணவுகள் ஆகும். தாய்ப்பால் சுரப்பு குறைவாக இருந்தால் ஆயுர்வேத சிகிச்சைகள் மற்றும் மருந்துகளாக பரிந்துரைக்கப்படுவதை தொடர்ந்து பார்க்கலாம்.

தாய்ப்பால் சுரப்பு குறைவாக இருந்தால்

தாய்ப்பால் சுரப்பு குறைவாக இருந்தால் சிகிச்சையில் பல மருந்துகளும் உணவு முறையில் சேர்க்கப்படும். வெட்டி வேர், நவரச அரிசி, கரும்பு வேர்காள், நட்ஸ் கிராஸ், தெருப்பை, கஷா, குந்த்ரா, நீர் செம்பை, அம்மான் பச்சரிசி போன்றவற்றை பயன்படுத்துவதற்கு பரிந்துரைக்கப்படுகிறது. தாய்ப்பால் சுரப்பை கூட்டும் மூலிகைகளின் வேர்களை கஷாயமாக்கிய பால், மற்றும் அரிசியுடன் வெந்தயம் சேர்த்து எடுப்பதன் மூலம் தாய்ப்பால் சுரப்பு ஊக்குவிக்கப்படும்.

தாய்ப்பால் சுரப்பை பொதுவாக ஊக்குவிக்கும் உணவுகள்.

பெருஞ்சீரக விதைகள் …

பால் விலையை அதிகரிக்க உதவும் பாரம்பரியமான மருத்துவத்தில் பெருஞ்சீரக விதைகளும் உண்டு.
இந்த பெருஞ்சீரக விதைகள் குழந்தைக்கு வாய் மற்றும் பெருங்குடல் பிரச்சனை வராமல் தடூக்கத்திற்கு உதவுகிறது. பெருஞ்சீரக விதைகளை நீரில் சேர்த்து கொதிக்க வைத்து தேநீராக்கி குடிக்கலாம்.

எள் விதைகள் ..

பால் அல்லாத கால்சியம் நிறைந்த மூலம் எனில் அது எள் விதைகள் ஆகும். இது முக்கியமான ஊட்டச்சத்தும் கூட. பாலூட்டும் தாய்மார்கள் எல்விதைகளை உணவில் சேர்த்தோ அல்லது வெல்லத்துடன் கலந்து உருண்டையாகவோ எடுத்துக்கொள்ளலாம். தினமும் ஒரு நெல்லிக்காய் அளவு உருண்டை எடுத்துகொண்டால் கூட போதுமானது.

பருப்பு வகைகள் …

பருப்பு வகைகள் புரதத்தின் ஆதாரம் மிக்கவை. குறிப்பாக சிவப்பு பருப்பு வகைகள் பாலூட்டும் தாய்மார்களுக்கு உதவக்கூடியவை. புரதத்தின் ஆதாரமிக்க இது இரும்பு மற்றும் நார்ச்சத்து அதிகம் கொண்டவையும் கூட. பருப்பு வகைகள் தினசரி ஒரு கப் அளவேனும் உணவில் இருக்கும் படி பார்த்துகொண்டால் தாய்ப்பால் வற்றாமல் பாதுகாக்கலாம்.

காய்கறிகள் …

காய்கறிகள் பூசணி குடும்பத்தை சார்ந்த காய்கறிகள் புடலங்காய், பீர்க்கங்காய், சுரைக்காய் போன்ற எல்லாமே பால் பயன்பாட்டை மேம்படுத்தக் கூடியவை. தினமும் ஒன்று அல்லது இரண்டு பச்சை காய்கறிகளையேனும் சாப்பிட வேண்டும்.

பூண்டு பால் …

பூண்டு பால் என்பது பாலூட்டும் தாய்மார்களுக்கு வழங்கப்படும் முக்கியமான பானம் ஆகும். பூண்டின் வாடை தாய்ப்பாலில் இருப்பதால் சில குழந்தைகள் தாய்ப்பால் குடிப்பதை தவிர்ப்பதுண்டு. எனினும் பூண்டு தாய்ப்பால் சுரப்புக்கு உதவும் என்பதால் அளவாக எடுக்க வேண்டும். பாலுடன் இஞ்சி, மிளகு வேர், கடுக்காய் பொடி, வெல்லம், நெய் சேர்த்து பாலில் கலந்தும் கொடுக்கலாம்.

ஆயுர்வேத மருந்துகள்

ஆலமரம், அத்திமரம் போன்ற மரப்பால் கொண்ட மரங்களின் தண்டு மரப்பட்டைகளை கஷாயமாக்கி குடிக்கலாம். இந்த பாலுடன் இந்துப்பு சித்திகை சேர்த்து இனிப்புக்கு வெல்லம் சேர்த்து குடிக்கலாம். நவர அரிசியுடன் கலந்தும் எடுத்துக்கொள்ளலாம். தாய்ப்பால் வற்றிய நிலையிலும் மார்பகங்களில் தாய்ப்பால் சுரக்க இவை உதவுகின்றன. ஆயுர்வேத விதாரி கிழங்கின் சாறு அல்லது விதாரி பொடி, ஷதாவரி கிழங்கு போன்றவையும் பாலில் கலந்து குடிக்கலாம். தாய்ப்பால் சுரப்பு குறையாமல் இருக்க பிரசவக்காலத்துக்கு பிறகு உணவில் கவனம் செலுத்துவதை காட்டும் கர்ப்பகாலத்திலேயே தாய்ப்பால் நிறைவாக இருக்க போதுமான சரியான உணவு முறையை பின்பற்றுவது அவசியம்.

 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஐந்தில் ஒரு பெண்கள் வாழ்நாளில் ஒரு முறையும் உடலுறவில் உச்சக்கட்டத்தை அனுபவிப்பதில்லை!

Pagetamil

புரையேறும் போது தலையில் தட்டலாமா?

Pagetamil

டாக்டர் ஞானப்பழத்தை கேளுங்கள்!

Pagetamil

மூட்டுவலி உள்ளவர்கள் தரையில் உட்காரக்கூடாது என்பது உண்மையா?

Pagetamil

டாக்டர் ஞானப்பழத்தை கேளுங்கள்!

Pagetamil

Leave a Comment