அரந்தலாவ பிக்குகள் படுகொலை குறித்த விசாரணை ஆரம்பம்!

Date:

1987 ஆம் ஆண்டு அரந்தலாவையில் 33 புத்த பிக்குகள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து குற்றப் புலனாய்வுத்துறை விசாரணையைத் தொடங்கியுள்ளதாக, உயர்நீதிமன்றத்தில் சட்டமா அதிபரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

1987 ஆம் ஆண்டு ஜூன் 2 ஆம் திகதி அம்பாறை மாவட்டத்தில் உள்ள அரந்தலாவ பகுதியில், விடுதலைப் புலிகள் என நம்பப்படுபவர்களால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.

பௌத்த பிக்குகள் மற்றும் சில பொதுமக்களுடன் சென்ற பேருந்து நுவரகலதென்ன கிராமத்திற்கு அருகில் 20 ஆயுதம் ஏந்திய நபர்களால் வழிமறிக்கப்பட்டது.

மகாவாபியில் உள்ள விகாரையில் இருந்து களனி ராஜா மகா விகாரைக்கு புனித யாத்திரை மேற்கொண்ட பௌத்த பிக்குகள் பேருந்தில் இருந்தனர். அரந்தலாவ காட்டுப் பகுதிக்கு பேருந்து செலுத்தப்பட்டது.

பௌத்த பிக்குகள் மீது துப்பாக்கிச்சூடு மற்றும் வாள்வெட்டு நடத்தப்பட்டதில் 33 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் 7 – 18 வயதிற்குட்பட்ட இளம் பிக்குகள் 30 பேர்.

மூன்று பிக்குகள்  பலத்த காயத்துடன் தப்பித்தனர்.

spot_imgspot_img

More like this
Related

முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவின் விபரீத முடிவுக்கு இதுதான் காரணமா?

முன்னாள் காவல்துறைமா அதிபர் சி.டி. விக்ரமரத்ன நேற்று காலை (17) மலாபேயில்...

ஹரக்கட்டா விவகாரம்: பிக்கு ஊடாக உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு இலஞ்சப்பணம் பரிமாற்றம்?

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் தலைவரான 'ஹரக்கட்டா'வின் மனைவியிடமிருந்து இலஞ்சமாகப் பெறப்பட்ட 1,200...

பிரதியமைச்சர் எரங்க குணசேகர, ஜகத் மனுவர்ண எம்.பிக்கு பிடியாணை

நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்