பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற அரச தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்களிற்கிடையிலான கலந்துரையாடலில் பலத்த வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றது.
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைகழக சட்டமூலம் குறித்து விவாதிக்கப்பட்ட போதே இந்த நிலைமை ஏற்பட்டது.
சட்டமூலத்திற்கு கடுமையான எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த சட்ட வரைபு குறித்து ஆராய குழுவொன்று நியமிக்கப்படுமென்றும், அந்த குழுவின் முடிவு வரும் வரையில் சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படாது என பிரதமர் உறுதியளித்துள்ளார்.




