தாலியை கழட்டிவைத்து விட்டு வந்த “குக் வித் கோமாளி” பிரபலம் …

Date:

குக் வித் கோமாளி 2 எம் சீசனில் பங்கேற்ற கனி எப்போதும் தாலி அணியாமல் இருப்பது பற்றி ரசிகர்கள் கேட்டிருக்கிறார்கள். அதற்கு அவர் சொன்ன பதிலை கேட்டு அனைவரும் ஷாக் ஆகி இருக்கின்றனர். தாலி கட்டுவது தமிழர் மரபில் இல்லை, அது இடையில் வந்தது. என் புருஷன் கட்டாத தாலியை ஏன் நான் போட்டிருக்கனும்? ’கனி கேள்வி ….

குக் வித் கோமாளி மூலம் பாப்புலர் ஆனவர் கனி. இரண்டாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு டைட்டில் ஜெயித்தவர். குக் வித் கோமாளியில் அவர் அதிகம் காரக்குழம்பு தான் செய்து அகட்டினர் என்பதால் அவரை காரக்குழம்பு கனி என்றும் நெட்டிசன்கள் அழைத்து வருகிறது.

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் அவர் தனியாக யூட்டியூப் சேனலும் நடத்தி வருகிறார். அதில் அவருக்கு அதிகம் ஒரு விஷயம் பற்றி கேள்விகள் வருகிறது என சொல்லி லைவ் வீடியோவில் பேசுகிறார் கனி. அவர் ஏன் தாலி போடுவதில்லை என்கிற கேள்வி தான் அது. “தாலி போடுவது தமிழ் கலாச்சாரத்தில் இல்லாத ஒரு விஷயம், இடையில் புகுத்தப்பட்டது என நான் நம்புகிறேன். தமிழ் மரபு உள்ள மனதிற்கு பிடித்தவர்கள் மாலை மாற்றி இவன் என் துணை என சொல்லி வாழ தொடங்குவது தான் நான் உறுதியாக நம்புகிறேன்.”
“நான் தாலி கட்டிதான் திருமணம் செய்து கொண்டேன். எனக்கு மிகவும் பிடித்தது அது. எனக்கு மஞ்சள் நிற தாலி அதிகம் பிடிக்கும். அதற்கு பிறகு அதை மாற்றி காட்டுவார்கள். அதை கட்டியது என் புருஷன் இல்லை, நிறைய சொந்தக்காரர்கள் தான் கட்டுவார்கள். அதை என் புருஷனுக்கு பதில் வேறு யாரோ போட்ட மூன்று முடிச்சு ஏனெனில் அது எனக்கு அதன் மீது ஈடுபாடு இல்லாமல் போனது. ”
“என் புருஷன் எனக்கு கட்டிய மஞ்சள் தாலியை நான் பத்திரமாக உயிர் போல பாதுகாத்து வைத்திருக்கிறேன்.

ஒருவரது கேரக்டரை நிர்ணயிப்பது தாலி இல்லை. என் கணவருடன் 8 வருடம் லவ், 12 வருடம் திருமண வாழக்கை என சந்தோசமாக வாழ்ந்துகொண்டிருக்கிறேன். இரண்டு குழந்தை உள்ளது. இதை எல்லாம் விட கல்யாணம் ஆகிவிட்டது என சொல்ல வேறு எந்த அடையாளமும் தேவையில்லை. ”
“நான் விடியோவுக்கு மட்டும் தாலி போட்டுகொண்டு மற்ற நேரத்தில் அதை கழட்டி போட்டுவிட்டு போகலாம். ஆனால் அப்படி ஏமாற்ற விரும்பவில்லை. இது தான் என் நிலைப்பாடு” என கனி கூறி உள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

கழிவு அகற்றும் உழவு இயந்திர பெட்டியில் பாதையாத்திரைகளுக்கான உணவு பொருட்கள் எடுத்துச் சென்ற வழங்கிய மட்டு மாநகர சபை

கதிர்காமம் புனித பாதை யாத்திரைகளுக்கு  காட்டுப்பகுதியில் செல்பவர்களுக்கு மட்டக்களப்பு மாநகரசபையின் குப்பை...

மியான்மர் கடற்கரையில் இரு அகதி படகுகள் மாயம்: 500-க்கும் மேற்பட்டோர் காணாமல் போனதாக ஐ.நா. தகவல்

மியான்மரில் நிலவும் வன்முறையிலிருந்து தப்பிச் சென்ற ரோஹிங்கியா அகதிகளை ஏற்றிச் சென்ற...

நிந்தவூர் பிரதேசத்தில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

நிந்தவூர் மத்திய வட்டாரத்தை உள்ளடக்கிய நிந்தவூர் 03 மற்றும் 15ஆம் பிரிவுகளில்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்