25.6 C
Jaffna
March 12, 2025
Pagetamil
இலங்கை

அதிபர், ஆசிரியர்கள் இன்று பாடசாலைகளுக்குச் செல்ல வேண்டாம்: இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வேண்டுகோள்!

இன்று (2) பாடசாலைகளிற்கு செல்ல வேண்டாமென இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பில் அந்த சங்கம் விடுத்துள்ள அறிக்கையில்,

பொது நிர்வாக அமைச்சின் சுற்றறிக்கையை சுட்டக்காட்டிய மத்திய கல்வி அமைச்சின் செயலாளருடைய தெளிவில்லாத சுற்றறிக்கையாலும், முன்னுக்குப்பின் முரணான வெளியீடுகளாலும் அதிபர்களும், ஆசிரியர்களும் ஏன் கல்வி உயர் அதிகாரிகளும் குழம்பிப்போய் உள்ளனர்.

வேறுவிதமான நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக இவ்வாறான குழப்பமான சுற்றறிக்கைகளை வெளியிட வேண்டாம் என கேட்டுக்கொள்வதோடு, அதிபர், ஆசிரியர்களை அவசியமில்லாமல் பாடசாலைக்கு அழைக்க வேண்டாம் என கேட்டுக்கொள்கின்றோம்.

இதைவிட பாடசாலைகளில் பிள்ளைகள் இல்லாத நிலையில் பாடசாலைகளுக்கு ஆசிரியர்களை அழைப்பது பொருத்தமற்றது.

ஆகையால் கல்வி அமைச்சிடம் இருந்து தெளிவான அறிவித்தல்கள் (மாணவர் வருகையின் பின்னர்) வரும்வரை பாடசாலைகளுக்குச் செல்ல வேண்டாம். என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மாணவியுடன் சேர்ந்து அடித்த ஆசிரியருக்கு எதிராக நடவடிக்கை

Pagetamil

முன்னாள் மாகாணசபை உறுப்பினரின் காணியில் மீட்கப்பட்டவை புலிகளின் ஆயுதங்களா?

Pagetamil

இன்றைய வானிலை

Pagetamil

யாழில் தமிழ் அரசு கட்சி கட்டுப்பணம் செலுத்தியது

Pagetamil

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கக்கோரி யாழில் கையெழுத்து

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!