அதிபர், ஆசிரியர்கள் இன்று பாடசாலைகளுக்குச் செல்ல வேண்டாம்: இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வேண்டுகோள்!

Date:

இன்று (2) பாடசாலைகளிற்கு செல்ல வேண்டாமென இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பில் அந்த சங்கம் விடுத்துள்ள அறிக்கையில்,

பொது நிர்வாக அமைச்சின் சுற்றறிக்கையை சுட்டக்காட்டிய மத்திய கல்வி அமைச்சின் செயலாளருடைய தெளிவில்லாத சுற்றறிக்கையாலும், முன்னுக்குப்பின் முரணான வெளியீடுகளாலும் அதிபர்களும், ஆசிரியர்களும் ஏன் கல்வி உயர் அதிகாரிகளும் குழம்பிப்போய் உள்ளனர்.

வேறுவிதமான நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக இவ்வாறான குழப்பமான சுற்றறிக்கைகளை வெளியிட வேண்டாம் என கேட்டுக்கொள்வதோடு, அதிபர், ஆசிரியர்களை அவசியமில்லாமல் பாடசாலைக்கு அழைக்க வேண்டாம் என கேட்டுக்கொள்கின்றோம்.

இதைவிட பாடசாலைகளில் பிள்ளைகள் இல்லாத நிலையில் பாடசாலைகளுக்கு ஆசிரியர்களை அழைப்பது பொருத்தமற்றது.

ஆகையால் கல்வி அமைச்சிடம் இருந்து தெளிவான அறிவித்தல்கள் (மாணவர் வருகையின் பின்னர்) வரும்வரை பாடசாலைகளுக்குச் செல்ல வேண்டாம். என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

ஹரக்கட்டா விவகாரம்: பிக்கு ஊடாக உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு இலஞ்சப்பணம் பரிமாற்றம்?

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் தலைவரான 'ஹரக்கட்டா'வின் மனைவியிடமிருந்து இலஞ்சமாகப் பெறப்பட்ட 1,200...

பிரதியமைச்சர் எரங்க குணசேகர, ஜகத் மனுவர்ண எம்.பிக்கு பிடியாணை

நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்...

தன்னைத்தானே சுட்டு உயிர்மாய்த்த முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி விக்ரமரத்ன உயிரிழந்தார் துப்பாக்கிச் சூட்டு காயத்துடன்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்