காதில் சீழ் வருதா, ஆயுர்வேதம் சொல்லும் வைத்தியம்…

Date:

காதில் சீழ் வருதா, ஆயுர்வேதம் சொல்லும் வைத்தியம்…

காதில் சீழ் வடிவது பாக்டீரியா அல்லது வைரஸால் உண்டாகும் காதுகளின் வீக்கத்தால் ஏற்படுகிறது. காதின் நடுவில் தொற்று, அதிர்ச்சி அல்லது காது கால்வாயில் காயம், வெளியில் இருக்கும் பொருள்களை காதுக்குள் போடுவது, காதுகளில் காற்று அழுத்தம் , அதிக இரைச்சல் காரணமாக காதுகள் சேதமடைவது போன்ற காரணங்களால் இது உண்டாகலாம். இதற்கு ஆயுர்வேத வைத்திய முறையில் என்ன தீர்வு என்பதை பார்க்கலாம்.

ஆயுர்வேத மருந்துகளான நிர்குந்தியாதி தைலம், வசாலசுனாதி தைலம், இர்ரண்டா சிக்ருவதி தைலம் 1 அல்லது 2 சொட்டுகள் காதுகளில் விடுவதன் மூலம் காதில் சீழ்வடிதல் நிற்கும்.

சூடான அல்லது குளிர் ஒத்தடம் காதுவலிக்கு உதவும். இரண்டும் மாறி மாறி செய்வதன் மூலம் தீர்வு காணமுடியும்.

பூண்டு மற்றும் கடுகு எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் சேர்த்து செய்யப்படும் கலவை உங்கள் காது வலியை குணப்படுத்தும். இந்த கலவையை தயாரிக்க நீங்கள் பூண்டு பல்லை எடுத்து கடுகு எண்ணெயில் சேர்க்க வேண்டும். அதை சூடாக்கி குளிரவைத்து காதில் 2 அல்லது 3 சொட்டுகள் விடலாம். இஞ்சி எண்ணெய் பயன்படுத்தலாம்.

காது வலி இருந்தால் கடுகு எண்ணெய் உடன் வெந்தயம் மற்றும் பெருங்காயம் சேர்த்து ஊறவிடவும். பிறகு இந்த கரைசலில் 2 அல்லது 3 சொட்டுகளை பாதிக்கப்பட்ட இடத்தில் போட்டு தலையை எதிர்புறமாக சாய்த்து வைக்கலாம். அதிக எண்ணெய் காதுக்குள் போடகூடாது என்பதில் கவனமாக இருங்கள்.

ஆப்பிள் சீடர் வினிகர் உடன் சம அளவு வெதுவெதுப்பான நீர் கலந்து காது கழுவலாம்.

பாக்டீரியா எதிர்ப்பு வைரஸ் தடுப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு காரணமாக வேப்ப எண்ணெய் உதவக்கூடும்.

வைரஸ் எதிர்ப்பு கொண்டிருக்கும் துளசி சாறை சேர்ப்பது சீழ் வெளியேற்றத்துக்கு உதவும்.

பூண்டு வெங்காயம் நசுக்கப்பட்ட சாறு தனியாக எடுத்து தேங்காயெண்ணெயுடன் கலந்து சூடாக்கி பயன்படுத்தலாம்.

துளசி சாற்றை பாதிப்பட்ட காதில் சில சொட்டுகளை ஊற்றுவதன் மூலம் காது தொற்று நோய் தடுக்க செய்யலாம்.

காதுகளை சுற்றி எண்ணெயில் அன்னாசி பூ சேர்த்து காய்ச்சிய எண்ணெயை பயன்படுத்தலாம். இது காதில் சீழ் வடிதலால் உண்டாகும் வலியையும் போக்கும்.

spot_imgspot_img

More like this
Related

கழிவு அகற்றும் உழவு இயந்திர பெட்டியில் பாதையாத்திரைகளுக்கான உணவு பொருட்கள் எடுத்துச் சென்ற வழங்கிய மட்டு மாநகர சபை

கதிர்காமம் புனித பாதை யாத்திரைகளுக்கு  காட்டுப்பகுதியில் செல்பவர்களுக்கு மட்டக்களப்பு மாநகரசபையின் குப்பை...

மியான்மர் கடற்கரையில் இரு அகதி படகுகள் மாயம்: 500-க்கும் மேற்பட்டோர் காணாமல் போனதாக ஐ.நா. தகவல்

மியான்மரில் நிலவும் வன்முறையிலிருந்து தப்பிச் சென்ற ரோஹிங்கியா அகதிகளை ஏற்றிச் சென்ற...

நிந்தவூர் பிரதேசத்தில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

நிந்தவூர் மத்திய வட்டாரத்தை உள்ளடக்கிய நிந்தவூர் 03 மற்றும் 15ஆம் பிரிவுகளில்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்