ஆறு வருடங்களுக்கு முன் நிறுத்தப்பட்ட இலங்கைக்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான விமான சேவை மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் மொஸ்கோவிலிருந்து புறப்பட்ட சிறிலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.
2015 ஆம் ஆண்டு முதல் இந்த நேரடி விமான சேவை இடைநிறுத்தப்பட்டது.
மொஸ்கோவில் உள்ள டொமோடெடோவோ விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சிறிரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் இன்று காலை 06.30 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.
இந்த விமானத்தில் ரஷ்யாவுக்கான இலங்கை தூதர் உள்பட 51 உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இருந்தனர்.
இந்த விமானம் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் A330-300 ஏர்பஸ் மூலம் இயக்கப்பட்டது, இதில் 269 பொருளாதார இருக்கைகள் மற்றும் 28 வணிக வகுப்பு இருக்கைகள் உள்ளன.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1