மாகாணங்களிற்கிடையிலான பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் திங்கள்கிழமை முதல் நீக்கப்படலாமென தகவல் வெளியாகியுள்ளது.
தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை தீவிரமாக இடம்பெறுவதால் நாட்டை வழமைக்கு கொண்டு வர அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக வரும் ஓகஸ்ட் 2ஆம் திகதி முதல் அரச ஊழியர்கள் அனைவரும் பணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், வரும் 2ஆம் திகதி முதல் மாகாணங்களிற்கிடையிலான பயணக்கட்டுப்பாடு நீங்கலாமென தெரிவிக்கப்படுகிறது.




