பருத்தித்துறை பிரதேச செயலகத்திற்குட்பட்ட கொட்டடி கிராமம் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள மக்களிற்கு நிவாரணப் பணியினை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் மேற்கொண்டிருந்தனர்.
கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் இடம்பெற்ற நிவாரணப்பணியை இராணுவத்தினர் நிறுத்த முற்பட்ட போது, இரு தரப்பிற்குமிடையில் கடுமையான வாக்கு வாதம் ஏற்பட்டது.
இராணுவம் மற்றும் பொலிஸார் கடமையில் ஈடுபட்டுள்ள பாதுகாப்புக் கடவையில் வைத்தே முடக்கத்தில் உள்ள மக்களுக்கு அவர்களது உறவினர்கள் மற்றும் நிவாரணப் பொருட்கள் வழங்குவது வழமை.
இக் கடவையில் வைத்தே உலருணவுப் பொருட்கள் சுகாதார விதிமுறைக்கமையவே இடம்பெற்றது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
2
+1
+1
+1
1