25.1 C
Jaffna
February 2, 2025
Pagetamil
குற்றம்

யாழில் யுவதியை நுள்ளியவர் கைது!

யாழ் மாவட்டத்தின், நெல்லியடி பொலிஸ் பிரிவில் வீதியில் செல்லும் யுவதிகளுடன் அங்க சேட்டையில் ஈடுபடும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்னொருவர் தலைமறைவாகி விட்டார்.

நெல்லியடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, நெல்லியடி- கொடிகாமம் வீதியில், துன்னாலையை அண்டிய பகுதிகளில் வீதியில் செல்லும் யுவதிகளுடன் அங்க சேட்டையில் ஈடுபடுபவர்கள் குறித்து பொலிசாருக்கு பல முறைப்பாடுகள் வந்தன.

இந்த சமூக விரோத செயலில் ஈடுபடுபவர்களை அடையாளம் காணும் பணியில் பொலிசார் ஈடுபட்டிருந்தனர்.

நேற்று முன்தினம் மாலை, துன்னாலையை சேர்ந்த யுவதியொருவர் வீதியில் செல்லும் போது, இரண்டு இளைஞர்கள் பின்னால் வந்து யுவதியின் பின் பகுதியில் நுள்ளி, தட்டி அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர்.

யுவதியும் துன்னாலை பகுதியை சேர்ந்தவர் என்பதால் சமூக விரோத செயலில் ஈடுபட்ட இருவரையும் அவர் அடையாளம் கண்டார். காமுகர்கள் இருவரும் துன்னாலையை சேர்ந்தவர்கள்.

அவர் நேற்று முன்தினம் மாலையே நெல்லியடி பொலிசாரிடம் முறைப்பாடு செய்தார்.

துரிதமாக செயற்பட்ட பொலிசார் நேற்று முன்தினமே, இரண்டு சந்தேகநபர்களின் வீடுகளையும் சுற்றிவளைத்தனர். ஒருவர் தப்பியோடி தலைமறைவாகி விட்டார். 22 வயதான ஒருவர் சிக்கினார்.

இரண்டு இளைஞர்களும் போதைக்கு அடிமையானவர்கள். கைதானவர் திருமணம் செய்து, தற்போது மனைவி கோபித்துக் கொண்டு சென்று விட்டார்.

பெண்களை பார்க்கும் போது தனக்கு ஆசையாக இருப்பதாகவும், அதனால் அங்க சேட்டையில் ஈடுபட்டு வந்ததாகவும் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.

அவரை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

மாதம்பையில் கத்திக்குத்து தாக்குதல் – ஆண் உயிரிழப்பு, பெண் படுகாயம்

east tamil

கடித்துக் குதறிய கணவன்; மனைவிக்கு உதட்டில் 16 தையல்கள்

east tamil

உடுவில் பிரதேசத்தில் 330 லீற்றர் கோடாவுடன் ஒருவர் கைது!

Pagetamil

கணவனின் கொடூரம்: மனைவியை கொன்று, சமைத்து, எலும்புகளை உரலில் இடித்த அதிர்ச்சி சம்பவம்!

east tamil

யாழ்ப்பாண கோழி பிடித்த 3 பேர் கைது!

Pagetamil

Leave a Comment