மேலும் பல தளர்வுகளுடன் புதிய சுகாதார வழிகாட்டல் குறிப்பு வெளியாகியுள்ளது.
இன்று (16) முதல் நடைமுறையாகும் வகையில்,
இசை நிகழ்ச்சிகளை மண்டபத்திற்குள் நடத்துவதற்கு இன்று முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 50 வீதமானோரின் பங்குப்பற்றுதலுடன் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி, இசை நிகழ்ச்சிகளை நடத்த முடியும்.
இதன்படி 1000 ம் இருக்கை கொண்ட அரங்குகளில் 500 பேர்களுக்கு அனுமதி.
எனினும், திறந்த வெளியில் இசை நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி வழங்கப்படவில்லை.
இதேவேளை, சிறுவர் பூங்காக்களையும் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மத நிறுவனங்கள் திறக்கப்பட்டன.
வனவிலங்கு சரணாலயங்கள் / உயிரியல் பூங்கா திறக்கப்பட்டது.
விளையாட்டு அனுமதிக்கப்படுகிறது (உடல் தொடர்பு விளையாட்டு அனுமதிக்கப்படவில்லை) விளையாட்டு மையங்கள் திறக்கப்பட்டன.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1