முல்லைத்தீவில் 14 வயது சிறுமியுடன் இரகசியமாக குடும்பம் நடத்திய இளைஞன் கைது!

Date:

முல்லைத்தீவு மாவட்டம், ஐயன்கன்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் 14 வயது சிறுமியை காதலித்து, குடும்பம் நடத்திய 26 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

புத்துவெட்டுவான் கிராமத்தில் இந்த சம்பவம் நடந்தது.

14 வயது சிறுமி வீட்டில் தனிமையில் இருந்த போது, சிறுமியுடன் நட்பாகி காதல் வலை வீசிய இளைஞன், வீட்டில் யாருமில்லாத சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, சிறுமியுடன் உல்லாசமாக இருந்துள்ளார்.

கடந்த 5ஆம் திகதி சம்பவம் நடந்தது.

சம்பவம் தொடர்பில் அயலவர்களிற்கு தகவல் தெரிய வந்ததையடுத்து, கிராம அமைப்பு ஒன்று பொலிசாருக்கு தகவல் லழங்கியது.

இதையடுத்து நேற்று முன்தினம் இளைஞன் கைதானார்.

சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர்கள்

இலங்கை கிரிக்கெட் நிறுவனம், ரியான் வான் நீகெர்க்கை தேசிய பந்துவீச்சுப் பயிற்சியாளராகவும்,...

ஜனாதிபதியை சந்தித்த தமிழ் முற்போக்கு கூட்டணி

பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணியினர் இன்று...

தாடியுடன் நீதிமன்றம் வந்த பிள்ளையான்!

2006 ஆம் ஆண்டு கிழக்கு மாகாணத் துணைவேந்தர் ஒருவர் காணாமல் போனது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்