பண்டாரவளை, எல்ல பகுதியில் அமைந்துள்ள ராவணா எல்ல நீர்வீழ்ச்சிக்கு அண்மித்த பகுதியிலுள்ள கற்பாறையில் மனித முகத்தையொத்த தோற்றம் தென்படுவதாக சுவர்ணவாஹிணி செய்தி வெளியிட்டுள்ளது.
இது இராவணன் மன்னனுடைய முகமாக இருக்ககூடும் என கருதும், பிரதேச மக்கள் அங்கு செல்ல ஆரம்பித்ததை தொடர்ந்து, ஊடகங்களின் கவனம் அங்கு குவிந்தது.
குறித்த கற்பாறையிலுள்ள ஒரு பகுதி இயற்கை காரணங்களினால் உடைந்து விழுந்துள்ளது. உடைந்த பகுதியிலேயே மனித முகத்தையொத்த தோற்றம் தென்படுகிறது.
இது இராவணனின் முகம்தான் என உள்ளூர் மக்கள் அடித்து சொல்கிறார்கள்.
இப்பகுதியிலேயே இராணவன் புஷ்பக விமானத்தை நிறுத்தியுள்ளார் எனவும், அண்மித்த பகுதியிலுள்ள குகையிலேயே சீதையை மறைத்து வைத்திருந்தார் எனவும் அப்பகுதியிலுள்ள மக்கள் புராணக் கதைகளை மேற்கோள்காட்டி, தமது நம்பிக்கையை நியாயம் செய்து வருகின்றனர்.
அந்த பகுதியை பார்வையிட பெருமளவானர்கள் குவிந்து வருகிறார்கள்.




