29.3 C
Jaffna
March 29, 2024
உலகம்

கொரோனா வைரசால் குழந்தைகளுக்கு நோய் தீவிரம், இறப்பு வாய்ப்பு குறைவு!

இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் தொற்று பாதித்த குழந்தைகள், இளம்வயதினரில் 40 சதவீதம் பேர் இறந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் 3-வது அலை குழந்தைகளை அதிகளவில் பாதிக்கும் என்றும், பாதிக்காது என்றும் முரண்பட்ட கருத்துகள் வெளியாகி வருகின்றன.

இந்த நிலையில் குழந்தைகள் மீதான கொரோனா வைரஸ் தொற்று தாக்கம் குறித்து இங்கிலாந்தில் லண்டன் பல்கலைக்கழக கல்லூரி, பிரிஸ்டல் பல்கலைக்கழகம், யார்க் பல்கலைக்கழகம், லிவர்பூல் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்து வந்தனர்.

இந்த ஆய்வு முடிவில், குழந்தைகளுக்கும், இளம் வயதினருக்கும் கொரோனா வைரசால் தொற்றுநோய் தீவிரம் அடைவதற்கும், இறப்பு நேர்வதற்கும் வாய்ப்பு குறைவாகவே உள்ளது என தெரிய வந்துள்ளது. அதிக ஆபத்து இருக்கிற இளைய வயதினர் எந்தவொரு குளிர்கால வைரஸ் மற்றும் பிற நோய்களுக்கு ஆளாக நேரிடும் எனவும் தெரியவந்துள்ளது.

இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் தொற்று பாதித்த குழந்தைகள், இளம்வயதினரில் 40 சதவீதம் பேர் இறந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

சிக்கலான நரம்பு கோளாறுகள் உடைய குழந்தைகளும், இளம் வயதினரும் இறக்கும் ஆபத்து உடையவர்களாக உள்ளனர் என ஆய்வு முடிவு கூறுகிறது. அதே நேரத்தில் அனைத்து குழந்தைகளுக்கும், இளம் வயதினருக்கும் ஆபத்து மிகக்குறைவுதான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான பேராசிரியர் லோர்னா பிரேசர் கூறி உள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

நாயகியின் உயிரைக் காத்த காதல் சின்னம்!: 21 கோடி ரூபாய்க்கு ஏலம் போன ‘டைட்டானிக்’ மரக்கதவு

Pagetamil

ஜூலியன் அசாஞ்சேவுக்கு மரண தண்டனை விதிக்க கூடாது: அமெரிக்க அரசிடம் உத்தரவாதம் கோரும் பிரிட்டிஷ் நீதிமன்றம்

Pagetamil

அமெரிக்காவில் கப்பல் மோதி பாலம் இடிந்து விபத்து: நீரில் மூழ்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரம்

Pagetamil

காசாவில் உடனடி போர் நிறுத்தத்தை கோரி ஐ.நா பாதுகாப்புசபையில் தீர்மானம்!

Pagetamil

இருட்டு அறை… போதைப்பொருள்… சொர்க்க பிரச்சாரம்: ஐஸ் தலைவரின் அடிமைகளாக வைக்கப்பட்டிருந்த இளம் பெண்களின் தகவல்கள்!

Pagetamil

Leave a Comment