தனிமைப்படுத்தல் சட்டங்களை ஏவி மக்கள் எதிர்ப்பை அடக்குகிறார்கள்: ஐ.ம.ச உயர்நீதிமன்றத்தில் மனு!

Date:

போராட்டத்தில் ஈடுபடும் பொதுமக்களை தனிமைப்படுத்தல் சட்டத்தின் அடிப்படையில் கைது செய்கின்றமைக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினர் உயர் நீதிமன்றத்தில் மூன்று அடிப்படை உரிமை மீறல் மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.

​கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக சுகாதார சேவைகள் பணிப்பாளர் வௌியிட்ட வழிகாட்டுதல்களை பயன்படுத்தி அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்பவர்களை கைது செய்வதற்கு பொலிஸார் எடுக்கும் நடவடிக்கையின் ஊடாக அடிப்படை உரிமைகள் மீறப்படுதவாக தீர்ப்பளிக்குமாறு அவர்கள் குறித்த மனுவின் ஊடாக கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவில்,  சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், பொலிஸ் மா அதிபர்,
சுகாதார அமைச்சர் உள்ளிட்டவர்கள் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

னோஜனின் குடும்பத்திற்கு ரிஷாட் பதியுதீன் நேரில் ஆறுதல்: விடுதலைக்காகத் தீவிர முயற்சி

சவூதி அரேபியாவில் தண்டனை விதிக்கப்பட்டுத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள கல்முனை, நற்பிட்டிமுனையைச்...

சஹ்ரானைக் கண்டதுமில்லை-பேசியதுமில்லை-ரிசாட் பதியுதீன்

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் முக்கிய சூத்திரதாரியான சஹ்ரான் ஹாசிமுடன் தனக்கு...

யாழில். இரண்டு கடலமைகளுடன் ஒருவர் கைது

யாழ்ப்பாணம் , சேந்தான்குளம் பகுதியில் இன்றைய தினம் சனிக்கிழமை இரண்டு கடலமைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் சேத்தான்குளம் பகுதியில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்