ஒலிம்பிக் தடகள வீரர்களுக்கு ரூ.5 லட்சம் : முதல்வர் அறிவிப்பு

Date:

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் 5 தமிழக தடகள வீரர்களுக்கு தலா ரூ.5 லட்சம் அளிக்க உள்ளதாக முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வரும் 23 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 8 வரை ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் தட களப் போட்டிகளில் பங்கு கொள்ளத் தேர்வானவர்களில் 5 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். இவர்களுக்குப் பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

தமிழக அரசு இது குறித்து, “ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வரும் 23ம் தேதி முதல் அடுத்த மாதம் 8ம் தேதி வரை நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளில் தடகள விளையாட்டில் 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் ஆண்கள் பிரிவில் பங்கேற்கவுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த எஸ்.ஆரோக்கிய ராஜீவ் மற்றும் நாகநாதன் பாண்டி மற்றும் 400 மீட்டர் தொடர் ஓட்டத்தின் கலப்புப் பிரிவில் சுபா வெங்கடேசன், தனலட்சுமி சேகர் மற்றும் ரேவதி வீரமணி என மொத்தம் 5 தடகள வீரர்களுக்கு அரசின் சிறப்பு ஊக்கத் தொகையாக தலா ரூ.5 லட்சம் வீதம் ரூ.25 லட்சம் வழங்க முதல்வர் ஆணையிட்டுள்ளார்.

இவ்வீரர்களில், எஸ்.ஆரோக்கிய ராஜீவ் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உயர்மட்ட விளையாட்டு வீரர்களுக்கான ஊக்கத் தொகை வழங்கும் திட்டம், சுபா வெங்கடேசன் சர்வதேச அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வெல்வதற்கு ஊக்குவிக்கும் திட்டம் ஆகிய உயரிய திட்டங்களின் கீழ் பயிற்சி பெற்றவர்களாவார்கள்.

ஏற்கனவே, டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ளத் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த 6 வீரர்களுக்குத் தலா ரூ.5 லட்சம் வீதம் மொத்தம் ரூ.30 லட்சம் அரசின் சிறப்பு ஊக்கத் தொகையினைக் கடந்த மாதம் 26ம் திகதியும், மேலும் ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ளத் தேர்ந்தெடுக்கப்பட்ட பவானி தேவிக்கு ரூ.5 லட்சம் சிறப்பு ஊக்கத் தொகையினை கடந்த மாதம் 20ம் திகதி முதல்வரால் வழங்கப்பட்டுள்ளது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

பசிலின் பணத்தை பறிமுதல் செய்ய நீதிமன்றம் உத்தரவு!

மாத்தறையில் 1.5 ஏக்கர் நிலத்தை முறைகேடாகப் பெறப்பட்ட நிதியைப் பயன்படுத்தி வாங்கியதாகக்...

கிளிநொச்சியில் புலிகளின் முகாமா?: அரசு விளக்கம்!

பளை (Palai) வனப்பகுதிக்குள் புலிகள் இயக்கத்தின் முகாம் ஒன்று இருப்பதாகச் சமூக...

சிறுநீர்ப்பையிலிருந்த 3.1 Kg கல் அகற்றல்: திருமலை வைத்தியசாலையில் சம்பவம்!

திருகோணமலையில் உள்ள ஒரு மருத்துவமனையில், 55 வயது நோயாளி ஒருவரிடமிருந்து 3.1...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்