15 வயது சிறுமி ,பணத்திற்காக இணையத்தளத்தில் விற்பனை செய்யப்பட்ட சம்பவத்தில் கைதான, இருதயநோய் நிபுணரின் சேவையை இலங்கை கடற்படை இடைநிறுத்தியுள்ளது.
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுஜெத்தென்ன, கடற்படை அறுவை சிகிச்சை நிபுணரின் சேவையை தற்காலிகமாக நிறுத்தி வைத்ததாக கடற்படை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து கடற்படை ஒரு தனி உள்ளக விசாரணையை நடத்தவுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக நேற்று கைது செய்யப்பட்ட இருதயநோய் நிபுணர் ஜூலை 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் லைக்கப்பட்டுள்ளார். அவர் 9 ஆம் திகதி அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்தப்படுவார்.




